நீடிக்கும் மர்மம் - வலுக்கும் போராட்டம் : என்ன ஆனது இம்ரான் கானுக்கு?
Jan 14, 2026, 01:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நீடிக்கும் மர்மம் – வலுக்கும் போராட்டம் : என்ன ஆனது இம்ரான் கானுக்கு?

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 07:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைச்சாலையில் உயிரிழந்து விட்டதாகத் தகவல் பரவி வருகிறது. இதற்குச் சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தாலும், இவ்விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான், 2018ம் ஆண்டு அந்நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து 4 ஆண்டுகள் அவர் ஆட்சி நடத்தி வந்த நிலையில், 2022ம் ஆண்டு அவர்மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

பிரதமராக இருந்தபோது அவருக்கு ஏராளமான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றை கருவூலத்தில் ஒப்படைக்காமல் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக இம்ரான் கான் மீது வழக்கு தொடரப்பட்டது. அதே நேரத்தில் அவர்மீதான மற்ற வழக்குகளின் விசாரணையும் வேகமெடுக்கவே, 2023ம் ஆண்டு இம்ரான் கானுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ராவல்​பிண்டி அடி​யாலா சிறைச்சாலையில் 2 ஆண்டுகளாக இம்ரான் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்களும், குடும்பத்தினரும் தொடர்ச்சியாக அவரை சென்று சந்தித்து வந்தனர். ஆனால், கடந்த ஒரு மாதமாக இம்ரானை சந்திக்க யாரையும் சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

எத்தனை முயற்சித்தும் அவரை பார்க்க முடியாமல் போகவே, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்ரான் கானை சிறை நிர்வாகம் தனிமை சிறையில் அடைத்துக் கடுமையாகத் தாக்கியதாகவும், இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டதாகவும் தகவல் பரவியது.

இந்தத் தகவல், அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, இம்ரான் கானின் சகோதரிகள் சிறை வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்ரான் கானை சந்திக்க கட்டாயம் தங்களை அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இருப்பினும் அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இம்ரான் கான் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகாரமாகவே, ஒரு கட்டத்தில் அடி​யாலா சிறைச்சாலை மௌனம் கலைத்தது. இம்ரான் கான் உயிரோடுதான் உள்ளதாகவும், அவர் பூரண நலத்துடன் இருப்பதாகவும் விளக்கம் அளித்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜாவும், தன் தரப்பில் சில விளக்கங்களை அளித்தார்.

சிறைச்சாலையில் ப்ரீமியர் வசதிகளை இம்ரான் அனுபவித்து வருவதாகவும், நட்சத்திர ஹோட்டல்களில்கூட கிடைக்காத உணவுகள் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சிறை நிர்வாகம் தரப்பிலும், ஆளும் அரசு தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், இம்ரான் கான் விவகாரம் முடிவுக்கு வரவில்லை. அவரை நேரில் பார்த்தால் மட்டுமே நீங்கள் கூறுவதை நாங்கள் நம்புவோம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். தனது தந்தை உயிரோடுதான் உள்ளார் என்பதற்கான ஆதரங்களை வழங்க வேண்டும் என, இம்ரானின் மகன் காசிம் கானும் தற்போது வலியுறுத்தத் தொடங்கியுள்ளார்.

இதனிடையே, இம்ரான் கானின் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவான குர்ரம் சீஷான் இந்த விவகாரத்தில் மறுபட்ட தகவலைத் தெரிவிக்கிறார். இம்ரான் கான் கொலை செய்யப்படவில்லை, அவர் நலமுடன்தான் இருப்பதாகக் கூறும் அவர், இம்ரான் கானை நாட்டை விட்டு வெளியேற அழுத்தம் கொடுக்கவே அவர் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்படுகிறார்.

நாடு முழுவதும் இம்ரான் கானுக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு ஷெபாஸ் ஷெரீப் அரசு அச்சப்படுதால்தான், அவர் குறித்த புகைப்படங்களையோ, வீடியோக்களையே வெளியிடாமல் உள்ளதாகவும் தெரிவிக்கிறார். இப்படி, இம்ரான் கானின் உடல்நலம் குறித்து பல்வேறு மாறுபட்ட தகவல்களும், யூகங்களும் தொடர்ச்சியாக பரவியவண்ணமே உள்ளன. சிறை நிர்வாகம் அவரை காண அனுமதி அளித்தால் மட்டுமே, இந்த குழப்பங்கள் அனைத்திற்கும் ஒரு தீர்வு ஏற்படும்.

Tags: pakistanPakistan PMpakistan news todayThe enduring mystery - the intensifying struggle: What happened to Imran Khan?
ShareTweetSendShare
Previous Post

நாளை 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Next Post

டெல்லி கார் குண்டு வெடிப்பு – 8 இடங்களில் என்ஐஏ சோதனை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies