திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் - உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசு!
Mar 15, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் – உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 5, 2025, 09:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், 144 தடை உத்தரவை நீக்கியும் உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பை காவல்துறையும், தமிழக அரசும் பின்பற்றாததால் பதற்றமான சூழல் நிலவியது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபமேற்றவும், 144 தடை உத்தரவை நீக்கியும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி என்.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் திரண்ட பாஜகவினரையும் பக்தர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டிய காவல்துறையினர், தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாகக் தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், காவல்துறை உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும், மேலிடத்தில் இருந்து அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், காவல்துறை அனுமதிக்கவில்லை. மாறாக 144 தடை உத்தரவை மீறியதாகக் கூறி அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், கார்த்திகை தீப விவகாரத்தில் 144 தடை உத்தரவை நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துவிட்ட நிலையில், திமுக அரசின் தொடர்ச்சியான தடை என்பது சட்ட அதிகாரத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல் என்று சாடியுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு மேலும் பிடிவாதம் பிடிக்காமல் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்த நிலையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags: Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestthiruparankundram muruganthiruparankundram judgementThiruparankundramThiruparankundram hillThiruparankundram hill issueThiruparankundram issueThiruparankundram temple.
ShareTweetSendShare
Previous Post

இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார் பிரதமர் மோடி!

Next Post

ஹிந்துக்களின் உரிமையை திமுக அரசு பறிக்கிறது – வேலூர் இப்ராஹிம்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies