திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் - உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசு!
Jan 14, 2026, 02:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் – உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 5, 2025, 09:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், 144 தடை உத்தரவை நீக்கியும் உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பை காவல்துறையும், தமிழக அரசும் பின்பற்றாததால் பதற்றமான சூழல் நிலவியது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபமேற்றவும், 144 தடை உத்தரவை நீக்கியும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி என்.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் திரண்ட பாஜகவினரையும் பக்தர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டிய காவல்துறையினர், தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாகக் தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், காவல்துறை உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும், மேலிடத்தில் இருந்து அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், காவல்துறை அனுமதிக்கவில்லை. மாறாக 144 தடை உத்தரவை மீறியதாகக் கூறி அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், கார்த்திகை தீப விவகாரத்தில் 144 தடை உத்தரவை நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துவிட்ட நிலையில், திமுக அரசின் தொடர்ச்சியான தடை என்பது சட்ட அதிகாரத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல் என்று சாடியுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு மேலும் பிடிவாதம் பிடிக்காமல் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்த நிலையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags: thiruparankundram judgementThiruparankundramThiruparankundram hillThiruparankundram hill issueThiruparankundram issueThiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestthiruparankundram murugan
ShareTweetSendShare
Previous Post

இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார் பிரதமர் மோடி!

Next Post

ஹிந்துக்களின் உரிமையை திமுக அரசு பறிக்கிறது – வேலூர் இப்ராஹிம்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies