திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் - உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசு!
Apr 29, 2026, 01:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் – உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 5, 2025, 09:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், 144 தடை உத்தரவை நீக்கியும் உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பை காவல்துறையும், தமிழக அரசும் பின்பற்றாததால் பதற்றமான சூழல் நிலவியது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபமேற்றவும், 144 தடை உத்தரவை நீக்கியும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி என்.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் திரண்ட பாஜகவினரையும் பக்தர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டிய காவல்துறையினர், தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாகக் தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், காவல்துறை உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும், மேலிடத்தில் இருந்து அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், காவல்துறை அனுமதிக்கவில்லை. மாறாக 144 தடை உத்தரவை மீறியதாகக் கூறி அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், கார்த்திகை தீப விவகாரத்தில் 144 தடை உத்தரவை நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துவிட்ட நிலையில், திமுக அரசின் தொடர்ச்சியான தடை என்பது சட்ட அதிகாரத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல் என்று சாடியுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு மேலும் பிடிவாதம் பிடிக்காமல் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்த நிலையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags: Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestthiruparankundram muruganthiruparankundram judgementThiruparankundramThiruparankundram hillThiruparankundram hill issueThiruparankundram issueThiruparankundram temple.
ShareTweetSendShare
Previous Post

இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார் பிரதமர் மோடி!

Next Post

ஹிந்துக்களின் உரிமையை திமுக அரசு பறிக்கிறது – வேலூர் இப்ராஹிம்

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies