திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் - உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசு!
Jul 28, 2026, 11:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் – உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 5, 2025, 09:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், 144 தடை உத்தரவை நீக்கியும் உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பை காவல்துறையும், தமிழக அரசும் பின்பற்றாததால் பதற்றமான சூழல் நிலவியது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபமேற்றவும், 144 தடை உத்தரவை நீக்கியும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி என்.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் திரண்ட பாஜகவினரையும் பக்தர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டிய காவல்துறையினர், தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாகக் தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், காவல்துறை உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும், மேலிடத்தில் இருந்து அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், காவல்துறை அனுமதிக்கவில்லை. மாறாக 144 தடை உத்தரவை மீறியதாகக் கூறி அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், கார்த்திகை தீப விவகாரத்தில் 144 தடை உத்தரவை நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துவிட்ட நிலையில், திமுக அரசின் தொடர்ச்சியான தடை என்பது சட்ட அதிகாரத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல் என்று சாடியுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு மேலும் பிடிவாதம் பிடிக்காமல் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்த நிலையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags: Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestthiruparankundram muruganthiruparankundram judgementThiruparankundramThiruparankundram hillThiruparankundram hill issueThiruparankundram issueThiruparankundram temple.
ShareTweetSendShare
Previous Post

இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார் பிரதமர் மோடி!

Next Post

ஹிந்துக்களின் உரிமையை திமுக அரசு பறிக்கிறது – வேலூர் இப்ராஹிம்

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies