அதிகரித்த கடல் உணவு ஏற்றுமதி : அமெரிக்காவின் வரியை மீறி எழுந்த இந்தியா!
Jan 14, 2026, 01:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அதிகரித்த கடல் உணவு ஏற்றுமதி : அமெரிக்காவின் வரியை மீறி எழுந்த இந்தியா!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா அதிக வரி விதித்துள்ள போதிலும், பிற நாடுகளுக்கான நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தரம் மற்றும் நியாயமான விலை காரணமாக, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் இந்தியா பக்கம் திரும்பியுள்ளனர்.

மொத்த உலக மீன் மற்றும் கடல் உணவு உற்பத்தியில் 8 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக உள்ளது. நாட்டின் முதன்மையான கடல் உணவு ஏற்றுமதியில் இறால் முதன்மையாக உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்த உடனேயே இந்தியாவின் கடல் உணவு மற்றும் மீன் உற்பத்தி துறைகடுமையாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதிபர் ட்ரம்ப்பின் வரி விதிப்பால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிந்துள்ள போதும், கடந்த ஏப்ரல் – அக்டோபர் மாதங்களுக்கு இடையே நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி 16.18 சதவீதம் அதிகரித்து 42,856 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த கடல் உணவு ஏற்றுமதி 40 சதவீதமும் இறால்களின் ஏற்றுமதி 57 சதவீதமும் அதிகரித்துள்ளது. மொத்த ஏற்றுமதியில் 27,280 கோடி ரூபாயுடன் இறால் முக்கிய பங்கு வைத்துள்ளது.

கடந்த ஆண்டு, இதே காலத்தில் இது 23,232 கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த வளர்ச்சிக்குக் காரணம், ஐரோப்பிய ஒன்றியம் 102 மீன்வள அலகுகளையும், 29 இந்திய மீன்வள அலகுகளை ரஷ்யா இறக்குமதி செய்ததும் தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, சீனா ரஷ்யா, வியட்நாம், பெல்ஜியம், ஜப்பான், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

வரிவிதிப்புக்கு முன்னதாகவே தென் அமெரிக்க நாடுகளான பெரு, சிலி; ஐரோப்பிய ஒன்றியம்; மற்றும் யூரேசிய பொருளாதார ஒன்றியம் (EEU) ஆகியவற்றுடன் இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.

கூடுதலாக, கடல் உணவு ஏற்றுமதிக்காக இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடன் (EFTA) இந்தியா ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தது. அதே நேரத்தில், ரஷ்யாவுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராயவும், சீனாவுடனான உறவை மேம்படுத்தவும் இந்தியா தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தது.

இந்திய கடல் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் நியாயமான விலை காரணமாக, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் இந்தியா பக்கம் திரும்பியுள்ளனர்.

Tags: அதிகரித்த கடல் உணவு ஏற்றுமதிsea foodsஅமெரிக்காஇந்தியாIncreased seafood exports: India rises above US tariffs
ShareTweetSendShare
Previous Post

சிறு, குறு நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பு : கோவையில் சுயசார்பு திட்டத்தை ஊக்குவிக்கும் ராணுவ தளவாட கண்காட்சி – சிறப்பு தொகுப்பு!

Next Post

காங்டோ மலையில் பறக்கும் மூவர்ணக்கொடி : மலையேற்றத்திலும் சாதனை படைத்த ராணுவ வீரர்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies