திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி மலையை சுற்றி உள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. அதனை தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை நிறைவேற்ற மறுத்தது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தீபத் தூணில் தீபம் ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பரங்குன்றம் மலையை சுற்றி உள்ள கருமாரியம்மன் கோயில் தெரு , சக்தி விநாயகர் கோயில் தெரு , பாலாஜி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு தீபங்களை ஏற்றினர்.
மேலும், 300-க்கும் மேற்பட்ட வீடுகளிலும் முருகனின் சேவற் கொடியை பறக்கவிட்டு பொது மக்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
















