புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் இன்று ம பரப்புரை மேற்கொள்வுள்ளார்.
புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் அனுமதி வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. விஜய்யின் வாகனத்தை பின்தொடரவோ, போக்குவரத்துக்கு இடையூறாக செயல்படவோ கூடாது என தொண்டர்களுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது
















