நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் - அமித் ஷா கண்டனம்!
Jan 14, 2026, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் – அமித் ஷா கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 11, 2025, 07:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

S.I.R விவகாரத்தில் மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தான் தோல்வியடையும் மாநிலத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம்சாட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

வாக்கு திருட்டால் தான் தேர்தலில் நேருவும், இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாக அவர் விமர்சித்தார். சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற முதல் தேர்தலில் பெரும்பாலான மக்கள் வல்லபாய் பட்டேலுக்கு வாக்களித்தும், நேருதான் பிரதமர் ஆனதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீசுக்கு கண்டனம் தெரிவித்தார். தங்களின் வாக்கு வங்கியை காப்பாற்றவே திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார். வாக்கு வங்கிக்காகவே எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் அதில் கையொப்பம் இட்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற முடியாமல் எதிர்க்கட்சியினர் தேர்தல் முறைகளை குறை சொல்வதாகவும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து அமித்ஷாவின் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சியினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் பேசிய அவர், விவாதத்திற்கு பயந்து ராகுல்காந்தியை போன்று ஓடக் கூடியவர்கள் யாரும் இல்லை என கிண்டலடித்தார். மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாதென கூறுவதா? என்றும் அமித்ஷா கேள்வி எழுப்பினார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு பதவி கொடுக்க கூடாதென அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பிய அமித்ஷா, இந்திய நாட்டின் பிரதமர் மோடியும் ஆர்எஸ்எஸ் காரர்தான் என்று கூறினார்.

மேலும் பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைக்கும் போதெல்லாம் வெற்றி பெறுவது பாஜகதான் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். பீகாரை போல், மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும் இண்டி கூட்டணி தோல்வி அடையும் என்றும் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.

Tags: Amit ShahS.I.R. issue.Lok Sabhahome minister amit shahThiruparankundramThiruparankundram hillThiruparankundram issueThiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowG.R. Swaminathan
ShareTweetSendShare
Previous Post

இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் – தமிழக அரசு எச்சரிக்கை!

Next Post

கனிம வள கொள்ளையை தடுப்பதில் தமிழக அரசின் செயல்பாடுகளில் திருப்தியில்லை – சென்னை உயர் நீதிமன்றம்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies