நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பு இயங்குகிறது - மோகன் பகவத்
Mar 15, 2026, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பு இயங்குகிறது – மோகன் பகவத்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 10, 2025, 08:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பு இயங்குவதாக அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டை ஒட்டி, நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. , சென்னை, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில்  நடைபெற்ற  இளைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோகன் பகவத் பங்கேற்று பேசினார்.

அப்போது,  ஆர்எஸ்எஸ் இயக்கப்பணி 100 ஆண்டுகளை கடந்துள்ளது. இத்தனை நாட்கள் இந்த இயக்கம் என்ன செய்துள்ளது என்பது மக்களுக்கு பெருமளவு தெரியவில்லை. ஆர்எஸ்எஸ் பற்றி தெரிந்து கொள்ள மக்கள் விக்கிபீடியாவை நாடுகின்றனர்.

அதில் இருக்கும் தகவல்கள் முற்றிலும் உண்மையில்லை. அமைப்பின் பணிகள் குறித்து மக்கள் நேரடியாக அறிந்து கொள்ள வேண்டும். உண்மையை மக்கள் அறிய வேண்டும் என எண்ணுகிறேன். மக்கள் நேரடியாக அமைப்பை பற்றி புரிந்து கொள்வது அவசியம் என தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு யாரும் போட்டியாளர்கள் கிடையாது. நாட்டை முன்னேற்றுவதற்காகவே இயங்குகிறது. அதுவே இந்த அமைப்பின் அடிப்படை கொள்கை. என்றும் அவர் கூறினார்.

வந்தே மாதரம் சொல்பவர்கள் மன்னிப்பு கேட்கும் சூழல் நிலவியது. நம் தாய் நாட்டை வணங்க நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஹெட்கேவார் கேள்வி எழுப்பினார். ராஜஸ்தான் முதல் தெலுங்கானா வரை ஒரு இயக்கத்தை வழிநடத்தினார். கோல்கட்டாவில் மருத்துவ பட்டம் பெற்ற அவர் ஆங்கிலேயர்களிடம் பணியாற்ற மறுத்தார். தாய்நாட்டுக்கு பணியாற்றவே விரும்பினார் என்றும் அவர் தெரிவித்தார்.

பல ஆண்டு பரிசோதனைக்கு பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பை ஹெட்கேவார் நிறுவினார். சிஸ்டம் சரியானால் சமூகம் சரியாகும் எனஅவர் நம்பினார். தனி மனித மாற்றத்துக்கு சமூக பொறுப்பு அவசியம். சமூக மாற்றம் ஏற்பட்டால் தான் நன்மை விளையும் என நம்பினார். பல மொழிகள் கலாசாரம் உள்ள இந்நாட்டு மக்களை எப்படி ஒருங்கிணைப்பது என அவர் சிந்தித்தார். பல வேறுபாடுகள் இருப்பினும், நம் அனைவருக்குமான நாடு ஒன்று என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.

இன்று நான்கு வகை ஹிந்துக்கள் உள்ளனர். ஒரு சிலர் ஹிந்து என்பதில் பெருமை கொள்கின்றனர். சிலர் அதில் என்ன இருக்கிறது என்கின்றனர். சிலர் அதை சொல்லவே தயங்குகின்றனர். சிலர் தாங்கள் ஹிந்துக்கள் என்பதையே மறந்துவிட்டனர். யாரெல்லாம் ஹிந்துக்கள் என அழைக்கப்படுகிறார்களே அவர்களை ஒருங்கிணைப்பது அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பாரதத்தின் மீதான பக்தி, முன்னோர் மீதான பக்தி கலாசாரத்தை போற்ற வேண்டும். அதுவே நம் தர்மம். நமது கலாசாரம் என்பது கங்கையை போன்றது தடையின்றி தொடர்ந்து பயணிப்பது. ஆர்எஸ்எஸ் என்பது மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி பெற்ற அமைப்பாகும். இந்த இயக்கம் தனி மனித ஒழுக்கத்தை மேம்படுத்துகிறது என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.

Tags: Ramachandra Convention CenterRSS movementChennaiRSS chief Mohan BhagwatThiruvanmiyurmohan bhagwat speechRSS centenary celebration
ShareTweetSendShare
Previous Post

கொரோனா வைரஸ் பரவல் ரகசியம் : சீன வைராலஜிஸ்டின் குற்றச்சாட்டால் மீண்டும் சர்ச்சை!

Next Post

டெல்லி காற்று மாசுபாட்டிற்கு காரணம்? : செயற்கை கோள்களை ஏமாற்றும் விவசாயிகள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies