காசி தமிழ் சங்கமம் 4.O : ஆர்வமாக தமிழ் பயிலும் உத்தரப்பிரதேச மாணவர்கள்!
Jan 14, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காசி தமிழ் சங்கமம் 4.O : ஆர்வமாக தமிழ் பயிலும் உத்தரப்பிரதேச மாணவர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் 4.O நிகழ்ச்சியின் மூலம், உத்தரபிரதேச மாணவர்கள் தமிழ் பயிலும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையை பள்ளி மாணவர்கள் மனதில் ஊட்டி வளர்க்கும் காசி தமிழ் சங்கமம் 4.O குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.

புவியியல் ரீதியாகப் பிரிந்திருந்தாலும், பண்பாட்டு ரீதியாகத் தமிழ்நாடும், காசியும் கொண்டிருக்கும் பந்தத்தை வலுப்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு மிகப் பிரமாண்டமாக நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி நடத்தப்படும் நிலையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் 4.O வெர்சனில், தமிழ் மொழி பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் “தமிழ் கற்கலாம்” என்ற தலைப்பில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்குப் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், உத்தரபிரதேச மாணவர்கள் தமிழ் மொழியின் தொன்மையான வரலாற்றை ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து இந்தி மொழி தெரிந்த தமிழ் ஆசிரியர்கள் 50 பேரை, உத்திரபிரதேசம் அழைத்துச் சென்றுள்ள மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், உத்தர பிரதேச மாணவர்கள் VR மூலமாகத் தமிழ் கற்கும் ஏற்பாட்டை சிறப்பாகச் செய்திருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் தரமான கல்வியை வழங்குவதற்கு , கடந்த 2023-ம் ஆண்டு முதல் விஆர் தொழில்நுட்ப முறையில் பாடம் நடத்தப்படும் நிலையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கும் அது பெரிதும் கைகொடுத்திருக்கிறது.

15 நாட்களில் தமிழ் மொழியின் அடிப்படைகளை கற்றுக்கொள்ளும் உத்தர பிரதேச மாணவர்கள், மேற்படி தமிழ் பயில விரும்பினால், அதற்கான ஏற்பாடுகளையும் அம்மாநில அரசு செய்து கொடுக்க உள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இரண்டாம் கட்டமாக, தமிழகத்தில் டிசம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் வாரணாசியிலிருந்து 300 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் பயணத்தில் தமிழ் பண்பாடு, புராதனமான கலாசாரம், நாகரீக தொடர்பு உள்ளிட்டவை குறித்து இந்தி மொழி பேசும் மாணவர்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது.

Tags: காசி தமிழ் சங்கமம்newstoday newsKashi Tamil Sangamam 4.O: Students from Uttar Pradesh who are eager to learn Tamil
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் “சிரிக்கும் புத்தர்?” : அணு ஆயுத சோதனைக்கு தயாராகும் இந்தியா!

Next Post

சுற்றுலா பயணி போல் வந்து உளவு பார்த்தாரா? – காஷ்மீர், லடாக் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றிய சீன இளைஞர் கைது!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies