ராணிப்பேட்டை அருகே பாஜக நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க சென்ற வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோரை தடுத்து நிறுத்திப் போலீசார் கைது செய்தனர்.
மேல்விஷாரம் பகுதியில் பாஜக நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருந்தது. இதில், அக்கட்சியின் தேசிய சிறுபான்மை பிரிவுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருந்தனர்.
இந்தநிலையில் ஆற்காடு மேம்பாலம் அருகே வந்த வேலூர் இப்ராஹிம் காரை மறித்த போலீசார் திடீரெனத் தடுத்து நிறுத்தினர்.
மேலும் கூட்டத்தில் பங்கேற்க செல்லக் கூடாதென அவரிடம் போலீசார் தெரிவித்தனர். அதற்கு ஏன் அனுமதி கிடையாது என வேலூர் இப்ராஹிம், போலீசாரிடம் கேள்வி எழுப்பினார்.
பின்னர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
















