வங்கதேசத்தில் 11 மாதங்களில் 83 லாக்கப் மரணங்கள் - ஷேக் ஹசீனா அரசை விட மோசம்!
Jan 14, 2026, 04:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வங்கதேசத்தில் 11 மாதங்களில் 83 லாக்கப் மரணங்கள் – ஷேக் ஹசீனா அரசை விட மோசம்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 12 மாதங்களாக வங்கதேசம் முழுவதும் லாக்கப் மரணங்கள், படுகொலைகள் எனக் கடுமையான மனித உரிமை மீறல்களும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் அதிகார துஷ்பிரயோகங்களும் எல்லை மீறி நடக்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் மூலம், முன்னாள் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா படிப்படியாக ஒரு சர்வாதிகாரியாகவே மாறியிருந்தார். 15 ஆண்டுகளுக்கும் மேல் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிரான போராட்டம், தீவிரமடைந்ததை அடுத்து, வேறு வழி இல்லாமல் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, பிரதமர் பதவியை விட்டு விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதும் நாட்டில் அமைதியும் மனித உரிமைக்குப் பாதுகாப்பும் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த எந்தச் சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 256-க்கும் அதிகமான கலவரங்களும் வன்முறைகளும் நடந்துள்ளன. இதில் சுமார் 140க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் 231 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது முந்தைய இரண்டு ஆண்டுகளின் புள்ளிவிவரங்களை விட மிக அதிகம் என்று மனித உரிமைகள் ஆதரவு சங்கத்தின் HRSS அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த வன்முறைகளால் இந்துக்களின் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. மேலும் துர்கா பூஜை, இந்து கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் இந்து பெண்களின் விளையாட்டு நிகழ்வுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. சொல்லப்போனால் இஸ்லாமிய மத அமைப்புகள் தங்கள் அரசியல் நலன்களுக்காக வன்முறையை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளன.

இந்நிலையில், கடந்த 11 மாதங்களில் சட்டத்துக்குப் புறம்பாக 29 காவல்துறை மரணங்கள் நடந்துள்ளதாக Ain o Salish Kendra (ASK) ஏஎஸ்கே அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இதே காலகட்டத்தில் 28 தண்டனைக் கைதிகளும், 55 விசாரணைக் கைதிகளும் சிறையில் மர்மமான முறையில் இறந்துள்ளனர் என்றும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த 11 மாதங்களில் 90 கைதிகள் நோய்வாய்ப்பட்டு இறந்ததாகச் சிறைத்துறை இயக்குநரகத்தின் உதவி ஆய்வாளர் ஜெனரல் ஜன்னத்-உல் ஃபர்ஹாத், கூறியுள்ள்ளார். ​​

காவல்துறை தலைமையகத்தின் உதவி ஆய்வாளர் சஹாதத் ஹொசைன், தற்கொலைகள் மற்றும் கலவரத்தால் இறந்தவர்களை மனித உரிமை அமைப்புகள் லாக்கப் மரணங்களாகக் காட்டுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, 2024 ஆகஸ்ட் முதல் 2025 ஜூலை வரை முகமது யூனுஸின் இடைக்கால அரசில் பத்திரிகையாளர்கள் மீது 878 தாக்குதல்கள் நடந்துள்ளன.

முந்தைய ஆண்டை விட இது சுமார் 230 சதவீதம் அதிகம் என்று உரிமைகள் மற்றும் அபாயங்கள் பகுப்பாய்வுக் குழு (RRAG) தெரிவித்துள்ளது. அனைத்து சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் லாக்கப் மரணங்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும், காவல்துறையினர் சட்டத்தின் படி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Tags: Bangaladeshமுகமது யூனுஸ்ஷேக் ஹசீனா83 lockdown deaths in Bangladesh in 11 months - worse than Sheikh Hasina's government
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானா : 7 வயது சிறுவனுக்கு 8 இடங்களில் சூடு வைத்த டியூசன் ஆசிரியர்!

Next Post

ட்ரம்புக்கு அமெரிக்க MP எச்சரிக்கை : இந்தியாவை பகைத்தால் நோபல் பரிசு “NO”!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies