வங்கதேசத்தில் 11 மாதங்களில் 83 லாக்கப் மரணங்கள் - ஷேக் ஹசீனா அரசை விட மோசம்!
Jul 23, 2026, 05:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வங்கதேசத்தில் 11 மாதங்களில் 83 லாக்கப் மரணங்கள் – ஷேக் ஹசீனா அரசை விட மோசம்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 12 மாதங்களாக வங்கதேசம் முழுவதும் லாக்கப் மரணங்கள், படுகொலைகள் எனக் கடுமையான மனித உரிமை மீறல்களும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் அதிகார துஷ்பிரயோகங்களும் எல்லை மீறி நடக்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் மூலம், முன்னாள் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா படிப்படியாக ஒரு சர்வாதிகாரியாகவே மாறியிருந்தார். 15 ஆண்டுகளுக்கும் மேல் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிரான போராட்டம், தீவிரமடைந்ததை அடுத்து, வேறு வழி இல்லாமல் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, பிரதமர் பதவியை விட்டு விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதும் நாட்டில் அமைதியும் மனித உரிமைக்குப் பாதுகாப்பும் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த எந்தச் சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 256-க்கும் அதிகமான கலவரங்களும் வன்முறைகளும் நடந்துள்ளன. இதில் சுமார் 140க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் 231 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது முந்தைய இரண்டு ஆண்டுகளின் புள்ளிவிவரங்களை விட மிக அதிகம் என்று மனித உரிமைகள் ஆதரவு சங்கத்தின் HRSS அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த வன்முறைகளால் இந்துக்களின் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. மேலும் துர்கா பூஜை, இந்து கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் இந்து பெண்களின் விளையாட்டு நிகழ்வுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. சொல்லப்போனால் இஸ்லாமிய மத அமைப்புகள் தங்கள் அரசியல் நலன்களுக்காக வன்முறையை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளன.

இந்நிலையில், கடந்த 11 மாதங்களில் சட்டத்துக்குப் புறம்பாக 29 காவல்துறை மரணங்கள் நடந்துள்ளதாக Ain o Salish Kendra (ASK) ஏஎஸ்கே அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இதே காலகட்டத்தில் 28 தண்டனைக் கைதிகளும், 55 விசாரணைக் கைதிகளும் சிறையில் மர்மமான முறையில் இறந்துள்ளனர் என்றும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த 11 மாதங்களில் 90 கைதிகள் நோய்வாய்ப்பட்டு இறந்ததாகச் சிறைத்துறை இயக்குநரகத்தின் உதவி ஆய்வாளர் ஜெனரல் ஜன்னத்-உல் ஃபர்ஹாத், கூறியுள்ள்ளார். ​​

காவல்துறை தலைமையகத்தின் உதவி ஆய்வாளர் சஹாதத் ஹொசைன், தற்கொலைகள் மற்றும் கலவரத்தால் இறந்தவர்களை மனித உரிமை அமைப்புகள் லாக்கப் மரணங்களாகக் காட்டுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, 2024 ஆகஸ்ட் முதல் 2025 ஜூலை வரை முகமது யூனுஸின் இடைக்கால அரசில் பத்திரிகையாளர்கள் மீது 878 தாக்குதல்கள் நடந்துள்ளன.

முந்தைய ஆண்டை விட இது சுமார் 230 சதவீதம் அதிகம் என்று உரிமைகள் மற்றும் அபாயங்கள் பகுப்பாய்வுக் குழு (RRAG) தெரிவித்துள்ளது. அனைத்து சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் லாக்கப் மரணங்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும், காவல்துறையினர் சட்டத்தின் படி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Tags: Bangaladeshமுகமது யூனுஸ்ஷேக் ஹசீனா83 lockdown deaths in Bangladesh in 11 months - worse than Sheikh Hasina's government
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானா : 7 வயது சிறுவனுக்கு 8 இடங்களில் சூடு வைத்த டியூசன் ஆசிரியர்!

Next Post

ட்ரம்புக்கு அமெரிக்க MP எச்சரிக்கை : இந்தியாவை பகைத்தால் நோபல் பரிசு “NO”!

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி கோயில் நில பதிவு மோசடி வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு!

தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகள் திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

நீட் விவாதத்தைத் தடுத்து நிறுத்துவதே காங்கிரசின் நோக்கம் – கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் – பிரதமர் மோடி உறுதி!

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்!

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி – தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies