இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என்.நேரு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனம் செய்ததில் 888 கோடி ரூபாயும், டெண்டர் விவகாரத்தில் ஆயிரத்து 20 கோடி ரூபாயும் ஊழல் நடந்துள்ளதாகத் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கும், டிஜிபிக்கும் அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.
இந்நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ரவிச்சந்திரன் இத்தாலி சென்றுள்ளதாகவும், அங்குச் சட்ட விரோதமாக முதலீடு செய்வது தொடர்பாகச் சிலரை சந்தித்து பேசி உள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ரவிச்சந்திரன் மற்றும் அவருக்கு உதவியாக வலம் வந்தவர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
















