இந்தியாவுடன் நெருக்கம் காட்டும் ஓமனுக்கு பயணம் : தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பிரதமர் மோடி!
Mar 15, 2026, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவுடன் நெருக்கம் காட்டும் ஓமனுக்கு பயணம் : தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 09:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்தவாரம் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ஓமன் நாட்டுக்குச் செல்கிறார். இந்தப் பயணம் புவிசார் அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வளைகுடாவைச் சேர்ந்த பெரும்பாலான அரச குடும்பங்கள் அனைத்தும் இந்தியாவுடன் வலிமையான தனிப்பட்ட உறவையும் ராஜ தொடர்பையும் கொண்டுள்ளன. இதில் ஓமன் மட்டும் விதிவிலக்கல்ல. இன்று நேற்றல்ல இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையேயான உறவு நீண்டகால பாரம்பரிய வரலாற்றைக் கொண்டதாகும். வளைகுடா நாடுகளிலேயே ஓமன் எப்போதுமே இந்தியாவின் பக்கமே நின்றுள்ளது. 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் போர் நடந்த நேரத்தில் வெளிப்படையாக இந்தியாவை ஆதரித்த ஒரே முஸ்லிம் பெரும்பான்மை நாடு ஓமன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் மூன்று பிரிவுகளுடனும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் முதல் வளைகுடா நாடாகவும் ஓமன் உள்ளது. மறைந்த ஓமன் சுல்தான் கபூஸ் பின் சையத்தின் தாத்தா, ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்தபடியே ஓமன் நாட்டை ஆட்சி செய்திருக்கிறார். சுல்தான் கபூஸ் பின் சையத் பூனாவில் படிக்கும் காலத்தில், நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் மாணவராக இருந்தார். அதனால் தான் சங்கர் தயாள் சர்மா ஓமனுக்கு சென்றபோது, அவருக்கு அரண்மனையில் மிக உயரிய வரவேற்பு அளித்து மகிழ்ந்தார் சுல்தான் கபூஸ் பின் சையத். 2018ம் ஆண்டு, பிரதமர் மோடியின் ஓமன் பயணத்தின் போதும், அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

2018-19ம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 5 பில்லியன் டாலரை எட்டியது. 2018 ஆம் ஆண்டில் ஓமனிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இருந்தது. ஓமனில் 3,200 க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 2023-24ம் ஆண்டில் 8.95 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இருதரப்பு வர்த்தகம், 2024-25 ஆம் ஆண்டில் 10.61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. பல நூற்றாண்டுகாலமாக வளர்ந்து வரும் இந்தியா-ஓமன் உறவுகளை நவீனகாலத்திலும் மேம்படுத்தியதில் சுல்தான் கபூஸ் பின் சையத் பங்கு மிக முக்கியமானது.

குறிப்பாக ஒரு காலத்தில், பலூசிஸ்தானின் குவாதரில் இருந்து கிழக்கு ஆப்பிரிக்காவின் சான்சிபார் வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஓமன், இப்பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்துக்கு உதவியாக இருந்து வருகிறது. ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து சுமார் 550 கிலோமீட்டர் தெற்கே உள்ள டக்ம் துறைமுகத்தை இந்தியா பயன்படுத்தவும் நிர்வாகிக்கவும் அனுமதி அளித்துள்ளது.

வளைகுடா நாடுகளிலேயே முதல் முறையாக இந்தியாவுடன் ஓமன் மேற்கொண்ட இந்த ஒப்பந்தம், இந்திய -பசிபிக் பிராந்தியத்தில் மேற்கு இந்தியப் பெருங்கடல், பாரசீக வளைகுடா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த உதவியுள்ளது. ஓமனின் நான்கு கடல் துறைமுகங்களிலும் தடையற்ற தொழில் மண்டலங்களை இந்தியா உருவாக்கி வருகிறது.

டுக்மில் உள்ள தொழில்துறை மண்டலங்கள் 30 ஆண்டு கார்ப்பரேட் வரி விலக்கு, பூஜ்ஜிய சுங்க வரி, 100 சதவீத வெளிநாட்டு உரிமை மற்றும் லாபத்தை முழுமையாகத் திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை இந்தியாவுக்கு ஓமன் வழங்கியுள்ளது. கூடுதலாக, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்குள் (OIC) பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினைகளில், எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாகவே ஓமன் உள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் வந்தபோது, UPI பணப் பரிவர்த்தனை, விண்வெளி ஆராய்ச்சி. சுகாதாரம். சுற்றுலா, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட 10 முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாக, அடுத்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவுகளின் 70 ஆண்டுகள் நிறைவையொட்டி பிரதமர் மோடி ஓமனுக்குச் செல்லும் நிலையில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, 2022ம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அமெரிக்காவும் விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

Tags: PM ModinewsOmantoday newsVisit to Omanshowing closeness to India: Prime Minister Modi to sign free trade agreement
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் முனம்பம் வார்டை கைப்பற்றிய NDA கூட்டணி : வக்ஃபு நில சர்ச்சையால் தடம் மாறிய உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!

Next Post

விளம்பரத்திற்காக வீணடிக்கப்படுகிறதா மக்களின் வரிப்பணம்? : பிரமாண்டத்தில் திரைப்பட விழாக்களை மிஞ்சும் அரசு நிகழ்ச்சிகள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies