19 மாகாணங்கள் வழக்கு : H1B விசா கட்டணத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!
Mar 15, 2026, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

19 மாகாணங்கள் வழக்கு : H1B விசா கட்டணத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கலிபோர்னியா உள்ளிட்ட 18 மாகாணங்களின் வழக்கறிஞர்கள் அதிபர் ட்ரம்பின் எச்1-பி விசாக்களுக்கு 88 லட்சம் ரூபாய் கட்டணம் விதித்த உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாள்தோறும் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த செப்டம்பர் மாதம் H1B விசா விண்ணப்பக் கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்தி உத்தரவிட்டார். H1B விசா வைத்திருப்பவரின் சராசரி ஆண்டு சம்பளத்தைவிட அதிகமாக விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்திய ட்ரம்ப் நிர்வாகம், அதிபரின் உத்தரவு, புதிய விசாக்களுக்கு மட்டுமின்றி, புதுப்பித்தலுக்கும் பொருந்தும் என்று கூறியிருந்தது.

மேலும், இந்தப் புதிய விதி கடந்த செப்டம்பர் 21ம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த விதி, அடுத்த 12 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று ட்ரம்ப் நிர்வாகக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது. சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதற்காக இந்த உத்தரவு அமல்படுத்தி இருப்பதாக ட்ரம்ப் அரசு கூறிவந்தாலும், அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களுக்கே கடுமையான பாதிப்பு என்று முன்னணி தொழில்நுட்ப மருத்துவ நிறுவனங்களே கவலை தெரிவித்திருந்தன.

இந்நிலையில் தான், கலிபோர்னியா மற்றும் 18 மாகாணங்களைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி வழக்கறிஞர்கள் ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது H-1B விசாக்களுக்கான புதிய கட்டணம் தொடர்பாக வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் கலிபோர்னியா மற்றும் மாசசூசெட்ஸ் மாகாணங்களின் அட்டர்னி ஜெனரல்களான போன்டா மற்றும் ஆண்ட்ரியா ஜாய் கேம்ப்பெல் ஆகியோர் மாகாணங்களின் கூட்டமைப்புக்குத் தலைமை ஏற்றுள்ளனர்.

இது H-1B விசா கட்டண உயர்வு தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிரான 49வது வழக்கு ஆகும். சான் பிரான்சிஸ்கோவில் செய்தியாளர்களைச் சந்தித்த கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் (Rob Bonta) ராப் போன்டா, புதிய விசா கட்டணத்தால் சுகாதார மையங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மிகப்பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மற்ற மாகாணங்களைப் போலவே, கலிபோர்னியாவுக்கும் அதிக ஆசிரியர்கள், அதிக செவிலியர்கள், அதிக மருத்துவர்கள் தேவை என்ற நிலையில், தற்போதைய தொழிலாளர் பற்றாக்குறையை இந்த புதிய கட்டணம் மேலும் மோசமாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நாடு தழுவிய ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாகவும், கடந்த ஆண்டு, அமெரிக்காவின் மொத்த பள்ளி மாவட்டங்களில் 74 சதவீதம் சிறப்பு கல்வி, வெளிநாட்டு மொழி மற்றும் STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 30,000 கல்வியாளர்கள் மட்டுமே H-1B விசாக்களை வைத்துள்ளனர் என்று குறிப்பிட்ட (Rob Bonta) ராப் போன்டா, நூற்றுக்கணக்கான கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் கற்பிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் வெளிநாட்டு ஆசிரியர்களையே நம்பியுள்ளன” என்றும் கூறியுள்ளார். மிகவும் குறைந்த வரவுசெலவுத் திட்டத்தில் இயங்கும் பல பொதுப் பள்ளிகளால் புதிய விசா கட்டணத்தைச் செலுத்தி ஆசிரியர்களைப் பணியமர்த்தும் கூடுதல் செலவை ஏற்றுக்கொண்டு சமாளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற அமெரிக்காவில் பல மாகாணங்களில் சுகாதாரத் துறையும் ஆபத்தில் உள்ளதாக தெரிவித்த (Rob Bonta) ராப் போன்டா சுகாதார பணியாளர்கள் கிடைக்காமல் மக்களின் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த புதிய H-1B விசா கட்டணம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தையும், நிர்வாக நடைமுறைச் சட்டத்தின் அறிவிப்பு மற்றும் கருத்து தெரிவிக்கும் செயல்முறையையும் மீறியுள்ளதாக கூறிய ராப் போன்டா, செயலாக்கச் செலவுகளை விட இது மிக அதிகமான கட்டணம் என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.

அமெரிக்காவுக்குத் தேவையான திறமையான தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கு இந்த புதிய விசா கட்டணம் தேவையற்ற தடையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க காங்கிரஸ் அதிகாரம் அளிக்காத நிலையில் H-1B விசா கட்டணத்தை உயர்த்தியுள்ள அதிபர் ட்ரம்ப்,தனது தன்னிச்சையான நடவடிக்கையால், நாட்டின் கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளைச் சீர் குலைத்து விட்டதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.

எந்தவொரு அதிபரும் குடியேற்றச் சட்டத்தை மீண்டும் திருத்தி எழுத முடியாது என்றும், காங்கிரஸையோ, அரசியலமைப்பையோ சட்டத்தையோ புறக்கணிக்கவும் முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்பின் உத்தரவுகளுக்கு நாடு தழுவிய எதிர்ப்பும், வழக்கும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இது அமெரிக்காவின் முன்னேற்றத்தையே முடக்கும் என்று பொருளாதார அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags: 19 provinces in lawsuit: Strong opposition to H1B visa feesamericausaDonald TrumpH1B visa
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்துாரில் பாக்.,கிற்கு பலத்த சேதம் : அமெரிக்காவின் ரூ.5,700 கோடி நிதி மூலம் அம்பலமான உண்மை!

Next Post

குவியும் ரூ.6 லட்சம் கோடி முதலீடு : AI-ல் தங்கவேட்டை நடத்தும் இந்தியா!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies