திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத தமிழக அரசைக் கண்டித்து, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
ஆனால் தமிழக அரசு அதற்கு அனுமதி வழங்காததால், நாடு முழுவதும் பெரும் சர்ச்சை வெடித்தது.
இதன் காரணமாகத் தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறையை கண்டித்து தேனி மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் சன்னாசி பாபு தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
















