கேரளாவில் முனம்பம் வார்டை கைப்பற்றிய NDA கூட்டணி : வக்ஃபு நில சர்ச்சையால் தடம் மாறிய உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரளாவில் முனம்பம் வார்டை கைப்பற்றிய NDA கூட்டணி : வக்ஃபு நில சர்ச்சையால் தடம் மாறிய உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 09:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் வக்ஃபு நில விவகாரத்தை மையமாக வைத்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், NDA கூட்டணி சர்ச்சைக்குரிய முனம்பம் வார்டில் முக்கிய அரசியல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கடற்கரை பகுதியான முனம்பம் வார்டில், கடந்த 2019-ம் ஆண்டு நில உரிமைக்கான சர்ச்சை தொடங்கியது. அந்தச் சமயத்தில் கேரள வக்ஃபு வாரியம் முனம்பம் மற்றும் அதன் அருகிலிருந்த சேரை பகுதிகளில் உள்ள சுமார் 404 ஏக்கர் நிலத்தை, வக்ஃபு சொத்தாக அறிவித்ததே இந்தச் சர்ச்சைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இதனால் அங்குப் பல தலைமுறைகளாக வசித்த லத்தீன் கத்தோலிக் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படுவோமா என்ற அச்சத்தில் ஆழ்ந்தனர். அப்போது தங்களிடம் சட்டப்பூர்வமான நிலப் பத்திரங்களும், வரி செலுத்தியதற்கான ரசீதுகளும் இருப்பதாக அவர்கள் கூறிய நிலையில், அப்பகுதியில் நில வரி வசூலிப்பதை நிறுத்தி அரசு மேலும் குழப்பத்தை அதிகரித்தது. அதன் பின்னர் இதனை எதிர்த்து 400 நாட்களுக்கு மேலாக முனம்பம் பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பு வழக்கிய கேரள உயர்நீதிமன்றம், முனம்பம் விவகாரத்தில் தேவையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதையும் எடுத்துரைத்ததுடன், வக்ஃபு வாரியத்தின் அறிவிப்புத் தவறு எனவும் சுட்டிக்காட்டியது. இருப்பினும் அந்தத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடையால், முனம்பம் பகுதியின் சட்டநிலை இன்னும் தீர்மானிக்கப்படாமல் உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி முனம்பம் வார்டில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பாஜக வெளிப்படையாகத் தனது ஆதரவை தெரிவித்தது.

இதனால் இதற்கு முன்புவரை காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவாக இருந்த சில வாக்காளர்கள், தற்போது NDA கூட்டணிக்கு ஆதரவாகத் திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆயிரத்து 780 வாக்காளர்கள் உள்ள முனம்பம் வார்டில், காங்கிரஸிடம் இருந்த இடத்தை NDA கூட்டணி கைப்பற்றி இருப்பது அம்மாநில அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தாங்களும் முனம்பம் பகுதி மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி வாதிட்டு வருவது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் இந்தத் தேர்தல் முடிவு கேரளாவில் பாஜக-விற்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாகவும், வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளப் பெரும் ஊக்கமாகவும் பார்க்கப்படுகிறது.

Tags: PM Modinewstoday newskerala newsNDA alliance wins Munambam ward in Kerala: Local body election results derailed by Waqf land dispute
ShareTweetSendShare
Previous Post

குவியும் ரூ.6 லட்சம் கோடி முதலீடு : AI-ல் தங்கவேட்டை நடத்தும் இந்தியா!

Next Post

இந்தியாவுடன் நெருக்கம் காட்டும் ஓமனுக்கு பயணம் : தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பிரதமர் மோடி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies