சென்னை எம்.ஜிஆர். நகரில் அரசுப் பள்ளி கட்டுமான பணியின்போது 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் காமராஜர் தெருவில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆசிஸ் பேரா, தனது 15 வயது மகன் சௌமன் பேரா உடன் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வழக்கம்போல, பணி செய்து கொண்டிருந்த சிறுவன், 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டப் பணியாளர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கட்டுமான பணிக்கு சிறுவனை பயன்படுத்தியது யார்? என்பது பற்றிப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















