பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாத சதி : NIA குற்றப்பத்திரிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் என்ன?
Jan 14, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாத சதி : NIA குற்றப்பத்திரிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் என்ன?

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானில் இருந்து திட்டமிடப்பட்ட எல்லைத் தாண்டிய பங்கரவாத சதி எனத் தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 597 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட 7 குற்றவாளிகளின் பங்கு வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில், 25 சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர்க் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு அமைப்பான NIA விசாரணை நடத்தி வருகிறது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பான விரிவான குற்றப்பத்திரிக்கையை NIA அமைப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஆயிரத்து 597 பக்கங்கள் கொண்ட அந்தக் குற்றப்பத்திரிக்கையில், இந்தத் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து திட்டமிடப்பட்ட எல்லைத் தாண்டிய பயங்கரவாத சதி என NIA குறிப்பிட்டுள்ளது.

மேலும், லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் அதன் பிரதிநிதி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) இணைந்து இந்தத் தாக்குதலை செயல்படுத்தியுள்ளதாகவும் NIA அமைப்பு தெரிவித்துள்ளது. மத மோதலை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்டதாகவும், இதில் ஈடுபட்ட மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பின்னர் இந்திய பாதுகாப்புப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகை விளக்குகிறது.

பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக மொத்தம் 7 பேர் மீது NIA குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாகப் பாகிஸ்தானில் இருந்து தாக்குதலைக் கையாண்டவர்கள், தாக்குதலை நேரடியாக நடத்திய 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள், தடைச் செய்யப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு, அதன் பிரதிநிதி அமைப்பான The Resistance Front மற்றும் அவர்களுக்கு அடைக்கலமும், உதவியும் வழங்கிய இரு உள்ளூர் நபர்கள் இதில் அடங்குவர். பஹல்காம் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டதாக சாஜித் ஜட் எனப்படும் ஹபிபுல்லா மாலிக் அடையாளம் காணப்பட்டுள்ளார். இஸ்லாமாபாத்தில் இருந்து செயல்பட்டு வரும் அவர், பாகிஸ்தானின் ISI அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.

லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் மூத்த தளபதிகளுள் ஒருவரான சாஜித் ஜட், The Resistance Front அமைப்பின் நடவடிக்கைகளைக் காஷ்மீரில் வழிநடத்துபவர் என்றும் NIA தங்கள் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய ஃபைசல் ஜட், ஹபீப் தாஹிர் மற்றும் ஹம்சா அஃப்கானி ஆகிய மூவரும், ஸ்ரீநகரின் டாசிகாம் வனப்பகுதியில் கடந்த ஜூலை 29-ம் தேதி நடந்த ‘ஆப்ரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பாகிஸ்தானில் வாங்கப்பட்ட ஆண்ட்ராய்டு கைபேசிகள், அவர்களின் பாகிஸ்தான் தொடர்பை உறுதிபடுத்தும் முக்கிய ஆதாரமாக உள்ளதாகவும் NIA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஃபர்வைஸ் அகமது மற்றும் பஷீர் அகமது ஜோத்தார் ஆகிய இரு உள்ளூர்வாசிகள், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகப் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் The Resistance Front அமைப்புகள் சட்டரீதியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது இந்த வழக்கில் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படும் நிலையில், லஷ்கர்-ஏ-தொய்பா மீது ஒரு நாட்டின் புலனாய்வு அமைப்பு நேரடியாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது இதுவே முதல் முறை.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைத் தொடர்ந்து நடைபெற்று வருவதாக NIA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஆதாரங்கள் மற்றும் நிதி தொடர்புகள் தொடர்பான ஆவணங்களும் வெளிவர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: NiaPahalgam attack: Pakistan-led terror plot: What are the shocking details revealed in the NIA chargesheet?
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியை காரில் அழைத்து சென்ற பட்டத்து இளவரசர் : ஜோர்டான் பயணத்தில் கவனம் பெற்ற சுவாரஸ்ய நிகழ்வு…!

Next Post

ரூ. 5 கோடி அளவிற்கு கனிம வள கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு 5 லட்சம் அபராதமா? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies