சென்னையில் அரசு பேருந்தில் மிகவும் ஆபத்தான முறையில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
சென்னை மாநகர பகுதிகளில் போதிய அளவிலான பேருந்து வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், வேளச்சேரியில் இருந்து கிண்டி நோக்கிச் செல்லும் மாநகர பேருந்தில் மிகவும் ஆபத்தான முறையில் மாணவர்கள் தொங்கியபடியே பயணம் செய்தனர்.
பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பப் பேருந்துகளை அதிகரிக்க வேண்டிய மாநகர போக்குவரத்து கழகமும், மாணவர்களை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
















