பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அங்கு அவருக்கு அளிக்கப்படும் விருதுகளை, இந்திய மக்களின் சார்பாக அவர் பெற்று வருகிறார். இதுவரை அவர் பெற்றுள்ள சர்வதேச விருதுகளை பட்டியலிடுகிறது இந்த சிறப்புத் தொகுப்பு.
பிரதமர் மோடி கடந்த 2016ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு பயணம் சென்றபோது அவருக்கு, ஆர்டர் ஆஃப் கிங் அப்துல் அசீஸ் என்ற உயரிய விருதை, சவுதி மன்னர் வழங்கிக் கவுரவித்தார். அதே ஆண்டு ஆப்கானிஸ்தான் சென்ற பிரதமருக்கு அந்நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்டது. இதேபோல் கடந்த 2018ஆம் ஆண்டு பாலஸ்தீனத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, பாலஸ்தீன அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது.
பின்னர் 2019ஆம் ஆண்டில், பஹ்ரைன், மாலத்தீவு, ஐக்கிய அரபு அமீரகங்களில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது கொடுக்கப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் லீஜியன் ஆஃப் மெரிட் விருதும், 2021ஆம் ஆண்டு பூடான் அரசின் உயரிய விருதும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டன.
பின்னர் 2023ஆம் ஆண்டு Fiji, பப்புவா நியூ கினி, எகிப்து, பிரான்ஸ், கிரீஸ் ஆகிய நாடுகளின் சார்பில் வழங்கப்பட்ட உயரிய விருதுகளை, இந்திய மக்களின் சார்பில் பெற்றுக் கொண்டார் பிரதமர் மோடி அதன் தொடர்ச்சியாக 2024ஆம் ஆண்டு, ரஷ்யா, டொமினிக் குடியரசு, நைஜீரியா, பார்படோஸ், குவைத் ஆகிய நாடுகளின் உயரிய விருதுகள் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டன.
நடப்பாண்டில் மொரீஷியஸ், இலங்கை, சைப்ரஸ், கானா, டிரினிடாட் டொபாகோ, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகள் உயரிய விருதுகளை நரேந்திர மோடிக்கு வழங்கிக் கவுரவித்தன. இதன் தொடர்ச்சியாக 28வது உயரிய சர்வதேச விருதை எத்தியோப்பியா தற்போது பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளது.
















