திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்று கிடக்கும் உயர்கல்வித்துறை - நயினார் நாகேந்திரன்
Apr 22, 2026, 11:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்று கிடக்கும் உயர்கல்வித்துறை – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 07:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வித்துறை உயிரற்றுக் கிடக்கிறது என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழக அரசின் கீழ் இயங்கும் 21 பல்கலைக்கழகங்களில் 12-ல் 40%-க்கும் அதிகமான அனுமதிக்கப்பட்ட ஆசிரியப் பணியிடங்களும், மீதமுள்ள 9 பல்கலைக்கழகங்களில் 15%-40% வரையிலான ஆசிரியப் பணியிடங்களும் காலியாக உள்ளதெனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிலும் குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய தமிழகத்தின் மிகத் தொன்மையான முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் பாதிக்குப் பாதி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளிவந்துள்ள தகவல், திமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கான அப்பட்டமான சான்று என்று அவர் தெரிவித்தார்.

அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்விக் கூடங்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துதராமல், தரமான கட்டடங்களைக் கட்டி எழுப்பாமல், போதிய ஆசிரியர்களை நிரப்பாமல், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று விளம்பர விழா எடுப்பதற்குத் திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என்று அவர் குற்றம் சாட்டினார்.

தனது பிள்ளைக்குப் பதவி கிடைப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு அதில் வெற்றி கண்ட முதல்வர் ஸ்டாலின், தமிழக இளைஞர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யாதது ஏன்? படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பும், படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களின் எதிர்காலமும் உள்ளடங்கிய இவ்விவகாரத்தைத் திமுக அரசு எதற்கு இத்தனை அலட்சியமாகக் கையாள்கிறது? உயர்கல்வித்துறையின் உயிர்நாடியை ஒடுக்கி தமிழக இளைஞர்களின் கல்விக் கனவை சாம்பலாக்குவது தான் திமுகவின் சமூகநீதியா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags: bjpDMKMK StalinHigher education sector is lifeless under the Dravidian model regime - Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி இளைஞர் தீக்குளித்து தற்கொலை – அண்ணாமலை இரங்கல்!

Next Post

பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது வழங்கி கவுரவித்த உலக நாடுகள் பட்டியல்!

Related News

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies