போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் அதன் தலைவர்கள் மீது இரக்கமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் ஒருங்கிணைப்பு மையக் கூட்டத்தில் பேசிய அவர், போதைப்பொருள் நெட்வொர்க்கை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேநேரத்தில், போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் மனிதநேய அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். செயற்கை போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகங்கள் மற்றும் கடத்தல் வலையமைப்புகளை கண்டறிந்து அழிக்க அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் அமித் ஷா வலியுறுத்தினார்.
















