வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 920-ஐ தாண்டியுள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு அடுத்தடுத்து இரண்டு மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கின. ரிக்டர் அளவுகோலில் முறையே 7.2 மற்றும் 7.5 ஆக பதிவான இந்த இரட்டை பூகம்பம் வெடித்தது.
வெறும் 39 வினாடிகள் இடைவெளியில் நிகழ்ந்து ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்தது. தலைநகர் கராகசில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாகுவைரா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர் உட்பட நாடு முழுவதையும் புரட்டிப்போட்டது. இதனால், ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 920-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்து 360-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மாயமான 50,000க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்படக்கூடும் என ஐநா புலம்பெயர்வு பிரிவு கவலை தெரிவித்துள்ளது.
















