சென்னையில் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல் வழங்க, பிரத்யேக செயலியை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு காவல் ஆணையர் அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை, எழும்பூர் காவல் அருங்காட்சியகத்தின் 4 ம் ஆண்டு துவக்க விழா தினத்தை முன்னிட்டு, உணவுத் திருவிழா நடைபெற்றது. இதனை சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் போதை பொருள் தடுப்புக்கு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருவதாகவும், நடப்பாண்டில் மட்டும் போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும், போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல் தெரிவிக்க பிரத்யேக செயலியை பயன்படுத்துமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
















