திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்த இளைஞர் - நயினார், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Mar 15, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்த இளைஞர் – நயினார், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 19, 2025, 06:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசை கண்டித்து, உயிரை மாய்த்துக் கொண்ட பக்தரின் மறைவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  திருப்பரங்குன்ற தீபத்தூணில் விவகாரத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகத் திமுக அரசு நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்ததைக் கண்டித்து, பூர்ணசந்திரன் உயிரை மாய்த்துக் கொண்ட தகவலறிந்து சொல்லொண்ணா துயரத்தில் தவிப்பதாக கூறியுள்ளார். திமுக அரசின் வீண் பிடிவாதத்திற்கு பலியானவரின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழர் வழிபாட்டு உரிமைகளை மீட்டெடுக்க காலங்காலமாக நாம் போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஆயிரம் தடைகள் வந்தாலும் அத்தனையும் தகர்த்தெறிந்து இனியும் நாம் தொடர்ந்து போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

நேர்கொண்ட பார்வையுடன்,அறத்தின் துணை கொண்டு போராட்டக்களத்தில் நாம் கைகோர்த்து நிற்போம் என்று கூறிய அவர், எந்தவொரு கஷ்டத்திற்கும் தற்கொலை என்பது என்றைக்குமே தீர்வாகாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இனியும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில், தீபமேற்ற வேண்டுமென்பதை வலியுறுத்தி, முருக பக்தர் பூர்ண சந்திரன் என்பவர், தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சூழலிலும், எந்தவொரு செயலுக்காகவும் தற்கொலை செய்து கொள்வது என்பது தீர்வாகாது என்றும், நீதிமன்றத்தின் பார்வைக்கு உட்பட்ட பொது விவகாரத்திற்காக, இன்னுயிரை மாய்த்துக் கொள்வது, நாம் கொண்டிருக்கும் கொள்கைக்கு முரண் என்றும் தெரிவித்துள்ளார். இப்படியான வருந்தத்தக்க முடிவுகளை ஒருபோதும் எவரும் மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

ஓட்டுக்காக, பதவிக்காக, பணத்திற்காக பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளை சிதைத்து, சிறுபான்மை சமுதாயத்தினரின் ஓட்டுக்காக ஒரு உயிரை பலி வாங்கியிருக்கிறது திராவிட மாடல் திமுக அரசு பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கண்டித்துள்ளார்.

இதை ஒரு உணர்ச்சி வசப்பட்ட சம்பவமாகவோ, மத உணர்வாகவோ சித்தரிப்பவர்கள், நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட அனிதா மரணத்தில் திமுக மலிவு அரசியல் செய்ததை மறந்து விடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று பொய்யை சொல்லி தரம் தாழ்ந்த அரசியலை செய்த திமுக அரசுதான், பூரண சந்திரனின் உயிரை பறித்ததற்கும் காரணம் என்பதை உணர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: Maduraithiruparankundram muruganL. Murugan condolence!nainar condolenceThiruparankundramThiruparankundram hillThiruparankundram issueThiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsyouth sucidethiruparankundram rowthiruparankundram protest
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாததற்கு எதிர்ப்பு – முருக பக்தர் தீக்குளிப்பு!

Next Post

முருக பக்தர் தற்கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் – மனைவி போலீசில் புகார்!

Related News

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies