செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேஸ்மேன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமானது 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது. கடன் தொகையை நீண்ட நாட்களாக லிங்குசாமி செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து, லிங்குசாமி வழங்கிய காசோலை, பணம் இல்லாமல் திரும்ப வந்ததாக குற்றஞ்சாட்டிய பேஸ்மேன் ஃபைனான்ஸ் நிறுவன உரிமையாளர் ராகுல் குமார், சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் லிங்குசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, லிங்குசாமி உட்பட இருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அடுத்த 2 மாதத்தில் வட்டியுடன் கடன் தொகையை செலுத்தாவிட்டால், கூடுதலாக இரண்டு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரித்தார்.
















