திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீக்குளித்து உயிரை மாய்த்த இளைஞரின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டுமென மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாகச் சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில்,
தேர்தல் வாக்குறுதிகளில் 80 %-ஐ திமுக நிறைவேற்றவில்லை என்றும் மே மாதத்திற்கு பிறகு திமுக, ஆட்சியை விட்டு செல்வது உறுதி என்று எல்.முருகன் குறிப்பிட்டார்.
பீகார் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீக்குளித்த இளைஞரின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
















