ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 3ஆம் உற்சவத்தில் நம்பெருமாள் அஜந்தா சௌரிக் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து உற்சவம் கடந்த 20ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது.
நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிலையில், பகல் பத்து 3ஆம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் அஜந்தா சௌரிக் கொண்டை மற்றும் ஆபரணங்கள் அணிந்தும், தாமரை நிறம் பட்டு உடுத்தியும் அர்ஜீன மண்டபத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
இதனை தொடர்ந்து, ஸ்ரீதேவி – பூதேவியுடன் எழுந்தருளிய நம்பெருமாளுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















