மாமல்லபுரத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் தவெக தலைவர் விஜய், குழந்தைகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
உலகம் முழுவதும் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
அத்துடன் பிரமாண்ட கேக்கை வெட்டிக் குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழந்தார்.
இந்த விழாவில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
















