சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆண்டுதோறும் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வார்.
அந்த வகையில் வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காகப் பினராயி விஜயன் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இசிஜி, ரத்த பரிசோதனைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன.
















