அமெரிக்காவில் புதிய கடற்படை அணியை உருவாக்கும் திட்டத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க கடற்படையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய போர் கப்பலுடன் புதிய கடற்படை அணியை உருவாக்கும் திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து புளோரிடா மாகாணம் மார்-அ-லோகோ நகரிலுள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரம்ப் பேசினார். அப்போது மிக பிரம்மாண்டமான போர் கப்பலுடன் கூடிய புதிய கடற்படை அணியை உருவாக்கவுள்ளதாக தெரிவித்தார்.
அவை இதுவரை உருவாக்கப்பட்ட போர் கப்பல்களை விடவும் 100 மடங்கு சக்தி வாய்ந்தவையாக இருக்கும் எனவும் டிரம்ப் கூறினார். மேலும், கோல்டன் கடற்படை அணி என்ற அந்த அணியில் சேர்க்கபடவிருக்கும் முதல் பிரமாண்ட கப்பலுக்கு யுஎஸ்எஸ் டிஃபையன்ட் என பெயர் சூட்டப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
















