அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி : கறிக்கோழி இறைச்சி இனி கனவில்தானா....?
Jan 14, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி : கறிக்கோழி இறைச்சி இனி கனவில்தானா….?

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் மக்களின் முக்கிய ப்ரோட்டின் உணவான கோழி இறைச்சி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பைத் தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் அசைவ உணவு பிரியர்களின் மிக முக்கிய உணவாகக் கோழி இறைச்சி உள்ளது.‌ தமிழ்நாட்டில் மட்டும் தினசரி மூன்று லட்சம் கிலோ கோழி இறைச்சி விற்பனை ஆகிறது. அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு லட்சம் கிலோ கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் கோழி இறைச்சியை பரவலாக உண்ணும் வழக்கம் இல்லாமல் இருந்த நிலையில், பண்ணை கறிக்கோழிகள் வரத் துவங்கிய பின்னர் சாதாரண பாமர மக்களும் எளிதில் அசைவ உணவு உண்ணும் நிலையை அடைந்தனர்.‌

விலை குறைவு, அதிக புரோட்டின் என எளிய மக்களின் விருப்ப உணவாகக் கோழி இறைச்சி உள்ளது. இந்நிலையில்தான் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் கோழி பண்ணைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள ஏராளமான விவசாயிகள் கறிக்கோழி பண்ணை அமைத்துக் கூலிக்கு கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பிராய்லர் நிறுவனங்களிடமிருந்து கோழிக்குஞ்சுகளைப் பெற்று 42 நாட்களுக்கு வளர்த்துக் கொடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர்.

இதில் ஒரு கிலோ பிராய்லர் கோழிக்கு 6 ரூபாய் 50 காசு மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. மின் கட்டணம் உயர்வு, கோழிக்குஞ்சுகள் வெப்பநிலையைச் சம நிலையில் வைத்திருக்கத் தேவையான அடுப்புக்கரி மூட்டைகள் என அனைத்தும் பல மடங்கு விலை உயர்ந்த நிலையில் ஆறு ரூபாய் 50 காசு மட்டுமே கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் குமுறல் எழுந்துள்ளது.

கூலி உயர்த்தப்படாததோடு பல மடங்கு உயர்ந்துள்ள மூலப் பொருட்கள் விலையால் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். பிராய்லர் கோழிகளுக்கு 20 ரூபாய், நாட்டுக்கோழி வளர்ப்புக்கு 25 ரூபாய் என கூலியை உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள கறிக்கோழி பண்ணை விவசாயிகள் 1ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

புதிய கோழிக்குஞ்சுகள் பெறப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கறிக்கோழி வர்த்தகம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் இன்றியமையாத அசைவ உணவை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடை பராமரிப்பு துறை, கறிக்கோழி உற்பத்தியாளர்கள், பண்ணை விவசாயிகள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இல்லையேல் அறிவித்தபடி உற்பத்தி நிறுத்தப் போராட்டம் 1ம் தேதி தொடங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: NEWS TODAYtoday newsA shock for non-vegetarian lovers: Will chicken meat now only be a dream...?அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சிnon veg
ShareTweetSendShare
Previous Post

சொத்து விவரங்கள் – ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கெடு!

Next Post

நோயாளிகளை வஞ்சிப்பதாக புகார் : சித்த மருத்துவமனையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies