ஆட்சி முடியும் தருவாயில் கூட இடைநிலை ஆசிரியர்களுக்கான வாக்குறுதியைத் திமுக அரசால் நிறைவேற்ற முடியவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
திமுக அரசு அளித்த எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்றும் காசி தமிழ் சங்கமத்திற்கு கன்னியாகுமரியிலிருந்து சிறப்பு ரயிலும், தென்காசியிலிருந்து சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
பாஜக பிரச்சார நிறைவு கூட்டத்தில் பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் கண்டிப்பாகப் பங்கேற்பர் என்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறதா எனப் பொங்கலுக்கு பிறகு தெரியவரும் என்றும் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என நம்ப வைக்கும் முயற்சி முதலமைச்சர் பின்னணியிலான சதி என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
















