கடலூர் மாவட்டம் காவனூரில் சோழர் காலத்தைச் சேர்ந்த துர்கை அம்மன் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காவனூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சுடுமண்ணாலான துர்க்கை சிற்பத்தை கண்டெடுத்தார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 19 புள்ளி 5 சென்டி மீட்டர் உயரம் கொண்ட இச்சிலை சோழர்கால கலைத்தன்மையை தெளிவாக எடுத்துக்காட்டுவதாகவும் கூறினார்.
















