ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தமிழகம், புதுச்சேரிக்கு மிக அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது - சி.பி.ராதாகிருஷ்ணன்
Jan 14, 2026, 01:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தமிழகம், புதுச்சேரிக்கு மிக அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது – சி.பி.ராதாகிருஷ்ணன்

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் மற்றும் தமிழர் மீது கொண்டுள்ள பாசத்தின் காரணமாகத்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மிக அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கபதற்காகப் புதுச்சேரி விமான நிலையம் வந்தடைந்த துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, கம்பன் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், எல்லோரையும் வரவேற்கும் நகராகப் புதுச்சேரி உள்ளது எனக் கூறினார்.

யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று ஐநாசபையில் பிரதமர் பேசியபோது தமிழர்களின் விருந்தோம்பல், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை உணர்த்தியது எனத் தெரிவித்தார்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராகக் குறுகிய காலமே இருந்தாலும், அவை எல்லாம் மிகப்பெரிய மன நிறைவை தந்தது எனக் குறிப்பிட்டார்.

மேலும், புதுச்சேரிக்கு மகத்தான திட்டங்கள் வரவுள்ளதாகவும், அடுத்த முறை பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வரும்போது அந்தத் திட்டத்திற்கான செயல் வடிவம் கிடைக்கும் எனவும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னதாகப் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாகக் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளார் எனப் புகழாரம் சூட்டினார்.

புதுச்சேரி மக்கள் குடியரசு துணை தலைவர் குறித்து பெருமையாகச் சொல்வதாகவும், இளைஞர்கள் முன்மாதிரியாகப் பார்ப்பதாகவும் கூறினார்.

மேலும், குடியரசு துணை தலைவரின் ஒவ்வொரு வார்த்தையும் இளைஞர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, இளமை பருவத்தில் இருந்து சி.பி.ராதாகிருஷ்ணனை நன்கு தெரியும் என்றும், அவருடன் பல நாட்கள் கழித்துள்ளதாகவும் கூறினார்.

துணைநிலை ஆளுநராக இருந்தபோது புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பெரிய அளவில் உதவிகளை செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எம்பிக்களை கட்டுக்குள் வைத்திருப்பதை பார்த்து வியந்துபோனதாகவும் கூறினார்.

மேலும், சி.பி.ராதாகிருஷ்ணனின் இறை பக்தி, கடவுளின் மீதான நம்பிக்கைதான் அவரை குடியரசு துணை தலைவர் பதவி என்ற நிலைக்கு உயர்த்தியது என முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

Tags: ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள்புதுச்சேரிதமிழகம்சி.பி. ராதாகிருஷ்ணன்Smart City projects have been allocated in large numbers to Tamil Nadu and Puducherry - C.P. Radhakrishnan
ShareTweetSendShare
Previous Post

பல் மருத்துவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

Next Post

ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை அமைக்கும் பணியில் தீவிரம் : ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 எப்போது? – அச்சத்தில் பாகிஸ்தான்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies