நீதிமன்றம் உத்தரவிட்டும் சாதியற்ற சான்றிதழ் வழங்க மறுப்பு - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றம் உத்தரவிட்டும் சாதியற்ற சான்றிதழ் வழங்க மறுப்பு – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 30, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்றம் உத்தரவிட்டும் நெல்லை மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் சாதியற்ற சான்றிதழ் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது குழந்தைகளுக்கு சாதி இருக்க வேண்டாம் என முடிவெடுத்தார். அதற்கான சான்றிதழை வழங்க கோரி அவர் விண்ணப்பித்தபோது, அதிகாரிகள் அதனை நிராகரித்தனர். இதனால், அதிருப்தியடைந்த அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதனை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு, கடந்த ஜூன் 10-ம் தேதி முக்கியத் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், சாதி இல்லை என குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கும்படி யாரேனும் கோரிக்கை விடுத்தால், அதனை ஏற்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக, தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை, குறிப்பிட்ட விதிமுறை இல்லை எனக்கூறி வருவாய்த்துறை அதிகாரிகள் மறுக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், சம்மந்தப்பட்டவர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் சான்றிதழை வழங்க வேண்டும் எனக் கூறினர்.

உயர்நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. பொதுமக்கள் தாங்கள் விரும்பினால், எந்தச் சாதியையும் சாராதவர் என்று விண்ணப்பித்து, அதற்கான சான்றிதழை பெற முடியும் என்பதை இந்த தீர்ப்பு தெளிவுபடுத்தியது.

இருந்தபோதும், நெல்லை மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த உத்தரவை சரிவர பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பலர் சாதியற்ற சான்றிதழ் கோரி வருவாய்த்துறை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர். ஒரு மாதம் கடந்த நிலையிலும், அவர்களுக்கு இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இதனால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவை அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வலியுறுத்தி தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, சாதியற்ற சமத்துவ சமுதாயத்தை நோக்கிய பயணத்தில் மைல்கல்லாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதில் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு அலட்சியத்துடன் செயல்பட கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: caste-free certificatesநீதிமன்றம் உத்தரவிட்டும் சாதியற்ற சான்றிதழ் வழங்க மறுப்புmadras high courtNellai districtrevenue officials
ShareTweetSendShare
Previous Post

இது சிலிகுரி பகுதியை வலுப்படுத்த வேண்டிய நேரம் – ஜக்கி வாசுதேவ்

Next Post

குடந்தை தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தரிசனம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies