நீதிமன்றம் உத்தரவிட்டும் சாதியற்ற சான்றிதழ் வழங்க மறுப்பு - சிறப்பு கட்டுரை!
Sep 13, 2026, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீதிமன்றம் உத்தரவிட்டும் சாதியற்ற சான்றிதழ் வழங்க மறுப்பு – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 30, 2025, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீதிமன்றம் உத்தரவிட்டும் நெல்லை மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் சாதியற்ற சான்றிதழ் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது குழந்தைகளுக்கு சாதி இருக்க வேண்டாம் என முடிவெடுத்தார். அதற்கான சான்றிதழை வழங்க கோரி அவர் விண்ணப்பித்தபோது, அதிகாரிகள் அதனை நிராகரித்தனர். இதனால், அதிருப்தியடைந்த அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதனை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு, கடந்த ஜூன் 10-ம் தேதி முக்கியத் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், சாதி இல்லை என குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கும்படி யாரேனும் கோரிக்கை விடுத்தால், அதனை ஏற்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக, தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை, குறிப்பிட்ட விதிமுறை இல்லை எனக்கூறி வருவாய்த்துறை அதிகாரிகள் மறுக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், சம்மந்தப்பட்டவர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் சான்றிதழை வழங்க வேண்டும் எனக் கூறினர்.

உயர்நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. பொதுமக்கள் தாங்கள் விரும்பினால், எந்தச் சாதியையும் சாராதவர் என்று விண்ணப்பித்து, அதற்கான சான்றிதழை பெற முடியும் என்பதை இந்த தீர்ப்பு தெளிவுபடுத்தியது.

இருந்தபோதும், நெல்லை மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த உத்தரவை சரிவர பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பலர் சாதியற்ற சான்றிதழ் கோரி வருவாய்த்துறை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர். ஒரு மாதம் கடந்த நிலையிலும், அவர்களுக்கு இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இதனால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவை அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வலியுறுத்தி தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, சாதியற்ற சமத்துவ சமுதாயத்தை நோக்கிய பயணத்தில் மைல்கல்லாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதில் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு அலட்சியத்துடன் செயல்பட கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: madras high courtNellai districtrevenue officialscaste-free certificatesநீதிமன்றம் உத்தரவிட்டும் சாதியற்ற சான்றிதழ் வழங்க மறுப்பு
Share
Tweet
SendShare
Previous Post

இது சிலிகுரி பகுதியை வலுப்படுத்த வேண்டிய நேரம் – ஜக்கி வாசுதேவ்

Next Post

குடந்தை தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தரிசனம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies