நீதிமன்றம் உத்தரவிட்டும் சாதியற்ற சான்றிதழ் வழங்க மறுப்பு - சிறப்பு கட்டுரை!
Jul 29, 2026, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றம் உத்தரவிட்டும் சாதியற்ற சான்றிதழ் வழங்க மறுப்பு – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 30, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்றம் உத்தரவிட்டும் நெல்லை மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் சாதியற்ற சான்றிதழ் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது குழந்தைகளுக்கு சாதி இருக்க வேண்டாம் என முடிவெடுத்தார். அதற்கான சான்றிதழை வழங்க கோரி அவர் விண்ணப்பித்தபோது, அதிகாரிகள் அதனை நிராகரித்தனர். இதனால், அதிருப்தியடைந்த அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதனை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு, கடந்த ஜூன் 10-ம் தேதி முக்கியத் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், சாதி இல்லை என குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கும்படி யாரேனும் கோரிக்கை விடுத்தால், அதனை ஏற்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக, தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை, குறிப்பிட்ட விதிமுறை இல்லை எனக்கூறி வருவாய்த்துறை அதிகாரிகள் மறுக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், சம்மந்தப்பட்டவர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் சான்றிதழை வழங்க வேண்டும் எனக் கூறினர்.

உயர்நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. பொதுமக்கள் தாங்கள் விரும்பினால், எந்தச் சாதியையும் சாராதவர் என்று விண்ணப்பித்து, அதற்கான சான்றிதழை பெற முடியும் என்பதை இந்த தீர்ப்பு தெளிவுபடுத்தியது.

இருந்தபோதும், நெல்லை மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த உத்தரவை சரிவர பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பலர் சாதியற்ற சான்றிதழ் கோரி வருவாய்த்துறை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர். ஒரு மாதம் கடந்த நிலையிலும், அவர்களுக்கு இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இதனால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவை அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வலியுறுத்தி தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, சாதியற்ற சமத்துவ சமுதாயத்தை நோக்கிய பயணத்தில் மைல்கல்லாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதில் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு அலட்சியத்துடன் செயல்பட கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Nellai districtrevenue officialscaste-free certificatesநீதிமன்றம் உத்தரவிட்டும் சாதியற்ற சான்றிதழ் வழங்க மறுப்புmadras high court
ShareTweetSendShare
Previous Post

இது சிலிகுரி பகுதியை வலுப்படுத்த வேண்டிய நேரம் – ஜக்கி வாசுதேவ்

Next Post

குடந்தை தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தரிசனம்!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies