ஆருத்ரா தரிசன விழா - சிதம்பரம் நடராஜர், நெல்லையப்பர் உள்ளிட்ட கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
Mar 15, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆருத்ரா தரிசன விழா – சிதம்பரம் நடராஜர், நெல்லையப்பர் உள்ளிட்ட கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 3, 2026, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி
நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேரில் இருந்து புறப்பட்ட சுவாமிகள், கோயில் வளாகத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபம் என அழைக்கப்படும் ராஜ சபைக்கு கொண்டு வரப்பட்டன.

இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நடராஜ மூர்த்திக்கும் சிவகாம சுந்தரிக்கும் பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசன திரவியங்களால் மகாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நடராஜர் பெருமானுக்கு ஸ்வர்ணாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது கோயில் வளாகத்தில் குவிந்திருந்த பக்தர்கள் சிவசிவா என கைகளை கூப்பி மனமுருகி வழிபட்டனர். மகா அபிஷேகத்தை காண அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள், சிவனடியார்கள் குவிந்ததால் கோயில் வளாகம் நிரம்பி வழிந்தது.

இதேபோல் சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி தியாகராஜ சுவாமி கோயில் மண்டபத்தில் அதிகாலை நடராஜர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனை தொடர்ந்து, சப்பரத்தில் எழுந்தருளிய நடராஜர், கோயில் உட்பிரகாரத்தில் 3 முறை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர், நடராஜர் முகத்தை துணியால் மறைத்து கொண்டு வெளியேறும் தறுவாயில் கதவு அடைக்கப்பட்டு, மீண்டும் அவர் சன்னதி திரும்பும் வைபவமும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லையப்பர் கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசன பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நெல்லை டவுன் பகுதியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் கடந்த 26ஆம் தேதி ஆருத்ரா தரிசன பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலையில் தாமிர சபையில் எழுந்தருளிய நடராஜ பெருமானுக்கும் சிவகாமி அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, பசு தீபாதாரனை நடைபெற்ற நிலையில், ஓதுவா மூர்த்திகள் திருவெம்பாவை பாடல்களைப் பாட நடராஜ பெருமானின் திருநடன காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவின் பகுதியில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவ கோயில்களில் ஒன்றான சங்கரநாராயண சுவாமி கோயிலில் கடந்த 25ஆம் தேதி திருவெம்பாவை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் உலா வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் காலை 5.10 மணிக்கு நடைபெற்றது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோவில்பட்டி பகுதியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது. கைலாசநாதர் கோயிலில் மார்கழி திருவாதிரை முக்கிய நிகழ்வான பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நிகழ்வு கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

அப்போது, ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த நடராஜப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகே உள்ள சிவகுருநாதன் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இருந்து வரவழைக்கப்பட்ட நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை காட்டப்பட்டது.

யாகங்கள் வளர்க்கப்பட்டு மேள தாளத்துடன் நடத்தப்பட்ட இந்த ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து, ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜ பெருமானுக்கும், சிவகாமி அம்பாளுக்கும் சந்தனம், வீபூதி, தேன், தயிர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், நடராஜ பெருமானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags: Arudra Darshan festivalThyagaraja Swamy TempleCuddaloreChidambaram Nataraja TempleNellaiappar temple
ShareTweetSendShare
Previous Post

ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாள் – பிரதம்ர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்!

Next Post

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகளிடையே  கோஷ்டி மோதல்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies