காஞ்சிபுரம் கந்த கோட்ட முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று அகல் விளக்கேற்ற முயன்ற பாஜகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்கும் விதமாக காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கந்த கோட்ட முருகன் கோயிலில் அகல் விளக்கேற்ற இருப்பதாக பாஜகவினர் அறிவித்தனர்.
இந்த ஊர்வலத்திற்கு அனுமதி பெறாததால் கைது செய்யப்படுவீர்கள் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் ஜெகதீசன் தலைமையில் பாஜகவினர் ஊர்வலம் செல்ல முயன்றனர். இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
















