திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயிர்நீத்த பூர்ண சந்திரனின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டுமென மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திமுக ஆட்சியில் பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு தடை விதிக்கப்படுகிறது என சாடினார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், தீபத்தூணில் தீபமேற்றும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
பூர்ண சந்திரனின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்காவிட்டால் திமுக அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறினார்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மீதான தாக்குதலுக்கு எல்.முருகன் கண்டனம் தெரிவித்தார்.
















