ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவது தொடர்பான தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி, KVN புரொடக்சன்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
வழக்கானது நீதிபதி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்ததையடுத்து, தணிக்கை வாரியம், படக்குழு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அப்போது, தணிக்கை குழு உறுப்பினரின் புகார் அடிப்படையில் படத்திற்கு சான்று வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல என தெரிவித்த நீதிபதி, மறு தணிக்கைக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்தார்.
மேலும், ஜனநாயகன் திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டுமெனவும் தணிக்கை வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதைத்தொடர்ந்து, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, தலைமை நீதிபதிகள் அமர்வில் மத்திய அரசு தரப்பிலான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் முறையீடு செய்தார்.
தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், ஜனநாயகன் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
















