ஜல்லிக்கட்டில் "ஜிபிஎஸ் ட்ராக்கர்" - வழி தவறும் காளைகளை கண்டுபிடிக்க அறிமுகம்
Jan 13, 2026, 10:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜல்லிக்கட்டில் “ஜிபிஎஸ் ட்ராக்கர்” – வழி தவறும் காளைகளை கண்டுபிடிக்க அறிமுகம்

Manikandan by Manikandan
Jan 10, 2026, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வழி மாறி செல்லும் காளைகளை கண்டுபிடிக்க அதன் உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர். ஆனால் அதிநவீன ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன், ஜல்லிக்கட்டு காளைகளின் இருப்பிடத்தை கண்டறியும் முறையை ஒருவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்

பாரம்பரியமும் கலாச்சாரமும் நிறைந்த ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளது.

ஜல்லிக்கட்டு காளைகளைத் தங்களது வீட்டில் ஒரு பிள்ளையாகக் கருதி வளர்த்து வரும் உரிமையாளர்கள் , மதுரை மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் காளைகளை அழைத்துச் சென்று பங்கேற்கச் செய்கின்றனர். இப்படி ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளைப் பங்கேற்க செய்வதற்காக அதன் உரிமையாளர்கள் வாகனங்களில் 10 முதல் 20 நபர்களை உடன் அழைத்துச் செல்வார்கள். ஏனென்றால் ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் வாடி வாசலிலிருந்து வெளியே வந்தவுடன் அந்த ஆக்ரோஷத்தில் யாரும் அதன் அருகே நெருங்க முடியாத அளவிற்கு வேகமாக ஓடும். அப்போது உரிமையாளர்கள் அழைத்துச் சென்ற நபர்கள் அந்தக் காளைகளைப் பின்னே துரத்திச் சென்று கயிறுகள் உதவியுடன் பிடித்து வீட்டிற்கு திரும்ப அழைத்து வருவார்கள்.

 

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வழி மாறிச் செல்லும் காளைகளைப் பின் தொடராமல் விட்டால் ஏதாவது ஒரு திசை நோக்கிச் சென்றுவிடும். அவற்றைக் கண்டுபிடிக்க உரிமையாளர்கள் மிகுந்த சிரமங்களைச் சந்திக்க நேரிடும். காளைகளைக் கண்டறிந்து வீட்டிற்கு அழைத்து வர மூன்று முதல் பத்து நாட்கள்வரை ஆகும். அதுவரை காளைகளின் உரிமையாளர்களும் வீட்டுக்குச் செல்லாமல் அவற்றைத் தேடிக் கொண்டிருப்பார்கள். இதனால் பத்தாயிரம் முதல் முப்பதாயிரம் வரை கூடச் செலவுகள் ஆகும் என்கிறார்கள் காளைகளின் உரிமையாளர்கள்…

 

காளைகளைப் போட்டிகளில் பங்கேற்க வாகனங்களில் அழைத்துச் செல்வதால் அந்தப் பாதைகளைக் காளைகள் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டு வழி தவறி செல்வதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் GPS தொழில்நுட்பத்தை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் தனது காளைகளுக்கும் பயன்படுத்தி புதுமையைப் புகுத்தி இருக்கிறார் மதுரை வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத் ராஜ். மாநகர காவல் துறையில் தலைமை காவலராகப் பணியாற்றும் வினோத் ராஜ் , கபாலி என்ற கபாலீஸ்வரர், பாயும் புலி, ஜெட்லி, புருஷாலி, ஜூனியர் ஜெட்லீ, ராமு குட்டி, ரெம்போ, புலி கேசி உள்ளிட்ட 11 காளைகளை வளர்த்து வருகின்றார். தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு ஜிபிஎஸ் ட்ராக்கர் கருவியைப் பயன்படுத்தி வருவது காளைகளை எளிதில் கண்டறிய உதவியாக இருப்பதாகக் கூறுகிறார் வினோத் ராஜ்.

 

ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை பங்கேற்கச் செய்வதோடு, அதிநவீன தொழில்நுட்பமான ஜிபிஎஸ் ட்ராக்கர் உதவியுடன் அவற்றை கண்டறியும் வினோத் ராஜின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: MaduraiGPS Tracker'Pongalo Pongal'.ஜல்லிக்கட்டுகாளை2026 jallikattuJALLAIKATTU BULLbull gps trackerbull gps
ShareTweetSendShare
Previous Post

கடனில் சிக்கித் திணறும் பாகிஸ்தான் – சவுதி கடனுக்குப் பதில் JF-17 போர் விமானங்கள் பாகிஸ்தான் முயற்சி!

Next Post

“பிரதமர் மோடி ஆட்சியில் ‘பெண்கள் தலைமையில் முன்னேற்றம்” – மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பேச்சு

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

2026-ல் அமையும் தேசிஜ கூட்டணி ஆட்சியில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies