ஜல்லிக்கட்டில் "ஜிபிஎஸ் ட்ராக்கர்" - வழி தவறும் காளைகளை கண்டுபிடிக்க அறிமுகம்
Mar 15, 2026, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜல்லிக்கட்டில் “ஜிபிஎஸ் ட்ராக்கர்” – வழி தவறும் காளைகளை கண்டுபிடிக்க அறிமுகம்

Manikandan by Manikandan
Jan 10, 2026, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வழி மாறி செல்லும் காளைகளை கண்டுபிடிக்க அதன் உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர். ஆனால் அதிநவீன ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன், ஜல்லிக்கட்டு காளைகளின் இருப்பிடத்தை கண்டறியும் முறையை ஒருவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்

பாரம்பரியமும் கலாச்சாரமும் நிறைந்த ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளது.

ஜல்லிக்கட்டு காளைகளைத் தங்களது வீட்டில் ஒரு பிள்ளையாகக் கருதி வளர்த்து வரும் உரிமையாளர்கள் , மதுரை மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் காளைகளை அழைத்துச் சென்று பங்கேற்கச் செய்கின்றனர். இப்படி ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளைப் பங்கேற்க செய்வதற்காக அதன் உரிமையாளர்கள் வாகனங்களில் 10 முதல் 20 நபர்களை உடன் அழைத்துச் செல்வார்கள். ஏனென்றால் ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் வாடி வாசலிலிருந்து வெளியே வந்தவுடன் அந்த ஆக்ரோஷத்தில் யாரும் அதன் அருகே நெருங்க முடியாத அளவிற்கு வேகமாக ஓடும். அப்போது உரிமையாளர்கள் அழைத்துச் சென்ற நபர்கள் அந்தக் காளைகளைப் பின்னே துரத்திச் சென்று கயிறுகள் உதவியுடன் பிடித்து வீட்டிற்கு திரும்ப அழைத்து வருவார்கள்.

 

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வழி மாறிச் செல்லும் காளைகளைப் பின் தொடராமல் விட்டால் ஏதாவது ஒரு திசை நோக்கிச் சென்றுவிடும். அவற்றைக் கண்டுபிடிக்க உரிமையாளர்கள் மிகுந்த சிரமங்களைச் சந்திக்க நேரிடும். காளைகளைக் கண்டறிந்து வீட்டிற்கு அழைத்து வர மூன்று முதல் பத்து நாட்கள்வரை ஆகும். அதுவரை காளைகளின் உரிமையாளர்களும் வீட்டுக்குச் செல்லாமல் அவற்றைத் தேடிக் கொண்டிருப்பார்கள். இதனால் பத்தாயிரம் முதல் முப்பதாயிரம் வரை கூடச் செலவுகள் ஆகும் என்கிறார்கள் காளைகளின் உரிமையாளர்கள்…

 

காளைகளைப் போட்டிகளில் பங்கேற்க வாகனங்களில் அழைத்துச் செல்வதால் அந்தப் பாதைகளைக் காளைகள் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டு வழி தவறி செல்வதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் GPS தொழில்நுட்பத்தை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் தனது காளைகளுக்கும் பயன்படுத்தி புதுமையைப் புகுத்தி இருக்கிறார் மதுரை வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத் ராஜ். மாநகர காவல் துறையில் தலைமை காவலராகப் பணியாற்றும் வினோத் ராஜ் , கபாலி என்ற கபாலீஸ்வரர், பாயும் புலி, ஜெட்லி, புருஷாலி, ஜூனியர் ஜெட்லீ, ராமு குட்டி, ரெம்போ, புலி கேசி உள்ளிட்ட 11 காளைகளை வளர்த்து வருகின்றார். தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு ஜிபிஎஸ் ட்ராக்கர் கருவியைப் பயன்படுத்தி வருவது காளைகளை எளிதில் கண்டறிய உதவியாக இருப்பதாகக் கூறுகிறார் வினோத் ராஜ்.

 

ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை பங்கேற்கச் செய்வதோடு, அதிநவீன தொழில்நுட்பமான ஜிபிஎஸ் ட்ராக்கர் உதவியுடன் அவற்றை கண்டறியும் வினோத் ராஜின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: 2026 jallikattuJALLAIKATTU BULLbull gps trackerbull gpsMaduraiGPS Tracker'Pongalo Pongal'.ஜல்லிக்கட்டுகாளை
ShareTweetSendShare
Previous Post

கடனில் சிக்கித் திணறும் பாகிஸ்தான் – சவுதி கடனுக்குப் பதில் JF-17 போர் விமானங்கள் பாகிஸ்தான் முயற்சி!

Next Post

“பிரதமர் மோடி ஆட்சியில் ‘பெண்கள் தலைமையில் முன்னேற்றம்” – மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பேச்சு

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies