ஜல்லிக்கட்டில் "ஜிபிஎஸ் ட்ராக்கர்" - வழி தவறும் காளைகளை கண்டுபிடிக்க அறிமுகம்
Sep 13, 2026, 03:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜல்லிக்கட்டில் “ஜிபிஎஸ் ட்ராக்கர்” – வழி தவறும் காளைகளை கண்டுபிடிக்க அறிமுகம்

Manikandan by Manikandan
Jan 10, 2026, 05:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வழி மாறி செல்லும் காளைகளை கண்டுபிடிக்க அதன் உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர். ஆனால் அதிநவீன ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன், ஜல்லிக்கட்டு காளைகளின் இருப்பிடத்தை கண்டறியும் முறையை ஒருவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்

பாரம்பரியமும் கலாச்சாரமும் நிறைந்த ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளது.

ஜல்லிக்கட்டு காளைகளைத் தங்களது வீட்டில் ஒரு பிள்ளையாகக் கருதி வளர்த்து வரும் உரிமையாளர்கள் , மதுரை மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் காளைகளை அழைத்துச் சென்று பங்கேற்கச் செய்கின்றனர். இப்படி ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளைப் பங்கேற்க செய்வதற்காக அதன் உரிமையாளர்கள் வாகனங்களில் 10 முதல் 20 நபர்களை உடன் அழைத்துச் செல்வார்கள். ஏனென்றால் ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் வாடி வாசலிலிருந்து வெளியே வந்தவுடன் அந்த ஆக்ரோஷத்தில் யாரும் அதன் அருகே நெருங்க முடியாத அளவிற்கு வேகமாக ஓடும். அப்போது உரிமையாளர்கள் அழைத்துச் சென்ற நபர்கள் அந்தக் காளைகளைப் பின்னே துரத்திச் சென்று கயிறுகள் உதவியுடன் பிடித்து வீட்டிற்கு திரும்ப அழைத்து வருவார்கள்.

 

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வழி மாறிச் செல்லும் காளைகளைப் பின் தொடராமல் விட்டால் ஏதாவது ஒரு திசை நோக்கிச் சென்றுவிடும். அவற்றைக் கண்டுபிடிக்க உரிமையாளர்கள் மிகுந்த சிரமங்களைச் சந்திக்க நேரிடும். காளைகளைக் கண்டறிந்து வீட்டிற்கு அழைத்து வர மூன்று முதல் பத்து நாட்கள்வரை ஆகும். அதுவரை காளைகளின் உரிமையாளர்களும் வீட்டுக்குச் செல்லாமல் அவற்றைத் தேடிக் கொண்டிருப்பார்கள். இதனால் பத்தாயிரம் முதல் முப்பதாயிரம் வரை கூடச் செலவுகள் ஆகும் என்கிறார்கள் காளைகளின் உரிமையாளர்கள்…

 

காளைகளைப் போட்டிகளில் பங்கேற்க வாகனங்களில் அழைத்துச் செல்வதால் அந்தப் பாதைகளைக் காளைகள் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டு வழி தவறி செல்வதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் GPS தொழில்நுட்பத்தை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் தனது காளைகளுக்கும் பயன்படுத்தி புதுமையைப் புகுத்தி இருக்கிறார் மதுரை வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத் ராஜ். மாநகர காவல் துறையில் தலைமை காவலராகப் பணியாற்றும் வினோத் ராஜ் , கபாலி என்ற கபாலீஸ்வரர், பாயும் புலி, ஜெட்லி, புருஷாலி, ஜூனியர் ஜெட்லீ, ராமு குட்டி, ரெம்போ, புலி கேசி உள்ளிட்ட 11 காளைகளை வளர்த்து வருகின்றார். தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு ஜிபிஎஸ் ட்ராக்கர் கருவியைப் பயன்படுத்தி வருவது காளைகளை எளிதில் கண்டறிய உதவியாக இருப்பதாகக் கூறுகிறார் வினோத் ராஜ்.

 

ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை பங்கேற்கச் செய்வதோடு, அதிநவீன தொழில்நுட்பமான ஜிபிஎஸ் ட்ராக்கர் உதவியுடன் அவற்றை கண்டறியும் வினோத் ராஜின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: 2026 jallikattuJALLAIKATTU BULLbull gps trackerbull gpsMaduraiGPS Tracker'Pongalo Pongal'.ஜல்லிக்கட்டுகாளை
Share
Tweet
SendShare
Previous Post

கடனில் சிக்கித் திணறும் பாகிஸ்தான் – சவுதி கடனுக்குப் பதில் JF-17 போர் விமானங்கள் பாகிஸ்தான் முயற்சி!

Next Post

“பிரதமர் மோடி ஆட்சியில் ‘பெண்கள் தலைமையில் முன்னேற்றம்” – மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பேச்சு

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies