ஜல்லிக்கட்டில் "ஜிபிஎஸ் ட்ராக்கர்" - வழி தவறும் காளைகளை கண்டுபிடிக்க அறிமுகம்
Jul 29, 2026, 08:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜல்லிக்கட்டில் “ஜிபிஎஸ் ட்ராக்கர்” – வழி தவறும் காளைகளை கண்டுபிடிக்க அறிமுகம்

Manikandan by Manikandan
Jan 10, 2026, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வழி மாறி செல்லும் காளைகளை கண்டுபிடிக்க அதன் உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர். ஆனால் அதிநவீன ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன், ஜல்லிக்கட்டு காளைகளின் இருப்பிடத்தை கண்டறியும் முறையை ஒருவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்

பாரம்பரியமும் கலாச்சாரமும் நிறைந்த ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளது.

ஜல்லிக்கட்டு காளைகளைத் தங்களது வீட்டில் ஒரு பிள்ளையாகக் கருதி வளர்த்து வரும் உரிமையாளர்கள் , மதுரை மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் காளைகளை அழைத்துச் சென்று பங்கேற்கச் செய்கின்றனர். இப்படி ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளைப் பங்கேற்க செய்வதற்காக அதன் உரிமையாளர்கள் வாகனங்களில் 10 முதல் 20 நபர்களை உடன் அழைத்துச் செல்வார்கள். ஏனென்றால் ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் வாடி வாசலிலிருந்து வெளியே வந்தவுடன் அந்த ஆக்ரோஷத்தில் யாரும் அதன் அருகே நெருங்க முடியாத அளவிற்கு வேகமாக ஓடும். அப்போது உரிமையாளர்கள் அழைத்துச் சென்ற நபர்கள் அந்தக் காளைகளைப் பின்னே துரத்திச் சென்று கயிறுகள் உதவியுடன் பிடித்து வீட்டிற்கு திரும்ப அழைத்து வருவார்கள்.

 

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வழி மாறிச் செல்லும் காளைகளைப் பின் தொடராமல் விட்டால் ஏதாவது ஒரு திசை நோக்கிச் சென்றுவிடும். அவற்றைக் கண்டுபிடிக்க உரிமையாளர்கள் மிகுந்த சிரமங்களைச் சந்திக்க நேரிடும். காளைகளைக் கண்டறிந்து வீட்டிற்கு அழைத்து வர மூன்று முதல் பத்து நாட்கள்வரை ஆகும். அதுவரை காளைகளின் உரிமையாளர்களும் வீட்டுக்குச் செல்லாமல் அவற்றைத் தேடிக் கொண்டிருப்பார்கள். இதனால் பத்தாயிரம் முதல் முப்பதாயிரம் வரை கூடச் செலவுகள் ஆகும் என்கிறார்கள் காளைகளின் உரிமையாளர்கள்…

 

காளைகளைப் போட்டிகளில் பங்கேற்க வாகனங்களில் அழைத்துச் செல்வதால் அந்தப் பாதைகளைக் காளைகள் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டு வழி தவறி செல்வதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் GPS தொழில்நுட்பத்தை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் தனது காளைகளுக்கும் பயன்படுத்தி புதுமையைப் புகுத்தி இருக்கிறார் மதுரை வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத் ராஜ். மாநகர காவல் துறையில் தலைமை காவலராகப் பணியாற்றும் வினோத் ராஜ் , கபாலி என்ற கபாலீஸ்வரர், பாயும் புலி, ஜெட்லி, புருஷாலி, ஜூனியர் ஜெட்லீ, ராமு குட்டி, ரெம்போ, புலி கேசி உள்ளிட்ட 11 காளைகளை வளர்த்து வருகின்றார். தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு ஜிபிஎஸ் ட்ராக்கர் கருவியைப் பயன்படுத்தி வருவது காளைகளை எளிதில் கண்டறிய உதவியாக இருப்பதாகக் கூறுகிறார் வினோத் ராஜ்.

 

ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை பங்கேற்கச் செய்வதோடு, அதிநவீன தொழில்நுட்பமான ஜிபிஎஸ் ட்ராக்கர் உதவியுடன் அவற்றை கண்டறியும் வினோத் ராஜின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: ஜல்லிக்கட்டுகாளை2026 jallikattuJALLAIKATTU BULLbull gps trackerbull gpsMaduraiGPS Tracker'Pongalo Pongal'.
ShareTweetSendShare
Previous Post

கடனில் சிக்கித் திணறும் பாகிஸ்தான் – சவுதி கடனுக்குப் பதில் JF-17 போர் விமானங்கள் பாகிஸ்தான் முயற்சி!

Next Post

“பிரதமர் மோடி ஆட்சியில் ‘பெண்கள் தலைமையில் முன்னேற்றம்” – மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பேச்சு

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies