மேற்கு வங்க பயணத்தை முடித்துக்கொண்டு அசாம் சென்ற பிரதமர் மோடி, கவுகாத்தியில் ரோடு ஷோ நடத்தினார்.
மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி 2 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக மேற்கு வங்கம் சென்ற அவர், மால்டாவில் நாட்டின் முதல் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, அசாம் சென்றடைந்த பிரதமர் மோடி, கவுகாத்தில் ரோடு ஷோ நடத்தினார். அப்போது, சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்கள், பாஜக கொடியை கையில் ஏந்தியபடி, பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, சாருசஜாய் மைதானத்தில் நடைபெற்ற பகுரும்பா த்வோ கலாச்சார நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மைதானத்திற்குள் வாகனத்தில் வலம் வந்த பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நடைபெற்ற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை பிரதமர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தார்.
















