வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் இறந்த வாக்காளர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர் என 97 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து பெயர் சேர்க்க மற்றும் திருத்த பணிகளுக்காக தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி 13 லட்சத்து 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ம் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் கால அவகாசம் ஜனவரி 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
















