கர்நாடகாவில் உள்ளாட்சி தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த அம்மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
கர்நாடகவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்கு சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து அந்த தீர்மானம் மாநில தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மே 25 ஆம் தேதி நடைபெறும் பெங்களூரு உள்ளாட்சி தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
















