சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக பெங்களூரு, பெல்லாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 4 புள்ளி 5 கிலோ அளவிலான தங்கம் திருடப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, பெங்களூரு, பெல்லாரி உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முக்கிய நபரான உன்னிகிருஷ்ணனுக்கு சொந்தமான அறங்காவலர்களின் வீடுகளிலும், பெல்லாரியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. வழக்கில் பெரிய அளவிலான மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
















