தாம்பரம் சானிடோரியம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் டிராக்டரில் சக்கரம் தனியே கழன்று ஓடிய சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அள்ளி டிராக்டர் போன்ற வாகனங்களில் ஏற்றப்படும் நிலையில் பாரதமாதா பிரதான சாலையில் சென்றுக்கொண்டிருந்த வாகனத்தின் சக்கரம் தனியே கழன்று ஓடியது.
இதனை நேரில் பார்த்தவர்கள் சம்பவத்தின் போது பள்ளி சிறுமி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாக தெரிவித்தனர். மேலும், மாநகராட்சி வாகனம் என்பதால் போலீசார் கண்டுகொள்வதில்லை எனவும், எந்த விதிகளும் பின்பற்றப்படுவதில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
















