ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 11-ம் வகுப்பு மாணவரின் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறையில் இயங்கி வரும் அரசு மாதிரிப்பள்ளியில் சஞ்சீவ் என்ற மாணவர் 11-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் சஞ்சீவ் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து அரசு மருத்துவமனைக்கு வந்த சஞ்சீவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.
















